Published : 21 Sep 2025 06:55 AM
Last Updated : 21 Sep 2025 06:55 AM

கர்நாடக மாநிலத்தில் மீண்டும் சாதிவாரி கணக்கெடுப்பு: நாளை தொடங்கி அக்.7 வரை நடக்கிற‌து

பெங்களூரு: க‌ர்​நாட​கா​வில் மீண்​டும் சாதி​வாரி கணக்​கெடுப்பு நாளை தொடங்கி அக்​டோபர் 7-ம் தேதி வரை நடை​பெறுகிறது.

இதுகுறித்து கர்​நாடக முதல்​வர் சித்​த​ராமையா நேற்று பெங்​களூரு​வில் செய்​தி​யாளர்​களிடம் கூறிய​தாவது: கர்​நாட​கா​வில் கடந்த 2015-ம் ஆண்டு நடத்​தப்​பட்ட சாதி​வாரி கணக்​கெடுப்பை ஏற்க கூடாது என பல்​வேறு தரப்​பிலும் இருந்து கோரிக்கை எழுந்​தது. அமைச்​சர​வை​யிலும் எதிர்ப்பு எழுந்​த​தால் அதனை ரத்து செய்​திருக்​கிறோம். மக்​களின் கல்​வி, பொருளா​தார மற்​றும் சமூக நிலையை கண்​டறிய‌ மீண்​டும் புதி​தாக சாதி​வாரி கணக்​கெடுப்பு நடத்த அமைச்​சரவை ஒப்​புதல் அளித்​தது.

இந்த கணக்​கெடுப்பு பணி​கள் செப்​டம்​பர் 22-ம் தேதி தொடங்கி அக்​டோபர் 7-ம் தேதி வரை நடை​பெறுகிறது. இதற்​காக 60 கேள்வி​கள் தயாரிக்​கப்​பட்​டு, அரசு ஊழியர்​கள் வீடு வீடாகச் சென்று தகவல்​களை சேகரிப்​பார்​கள். சுமார் 1.25 லட்​சம் ஆசிரியர்​கள் இப் பணி​யில் ஈடுபட உள்​ளனர். இதற்​காக ரூ.420 கோடி ஒதுக்​கீடு செய்​யப்​பட்​டுள்​ளது. வரும் டிசம்​பர் இறு​திக்​குள் சாதி​வாரி கணக்​கெடுப்பு விவரங்​களை தாக்​கல் செய்ய உத்​தர​விடப்​பட்​டுள்​ளது.

இந்த கணக்​கெடுப்பை வைத்து பாஜக​வும் சில சாதி அமைப்​பு​களும் அரசி​யல் செய்​கின்​றன. என்​றாலும் இதை ஒத்​திவைக்​கும் பேச்​சுக்கே இடமில்​லை. இவ்​வாறு சித்​த​ராமையா தெரி​வித்​தார்​.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x