Published : 21 Sep 2025 01:16 AM
Last Updated : 21 Sep 2025 01:16 AM

ஹெரிடேஜ் நிறுவன பங்கு விலை உயர்வால் சந்திரபாபு மனைவியின் சொத்து ஒரே நாளில் ரூ.121 கோடி உயர்வு

புதுடெல்லி: ஹெரிடேஜ் புட்ஸ் நிறுவன பங்கு விலை உயர்​வால் ஆந்​திர முதல்​வர் சந்​திர​பாபு நாயுடு மனை​வி​யின் சொத்து மதிப்பு ஒரே நாளில் ரூ.121 கோடி உயர்ந்​தது.

ஆந்​திர முதல்​வரும் தெலுங்கு தேசம் கட்​சித் தலை​வரு​மான சந்​திர பாபு நாயுடு குடும்​பத்​துக்கு சொந்​த​மான ஹெரிடேஜ் புட்ஸ் நிறு​வனம் ஹைத​ரா​பாத்தை தலை​மையக​மாகக் கொண்டு செயல்​படு​கிறது. தென்​னிந்​தி​யா​வின் முன்​னணி பால் பொருட்​கள் தயாரிப்பு நிறு​வனங்​களில் ஒன்​றாக திகழ்​கிறது. பங்​குச் சந்​தை​யில் பட்​டியலிடப்​பட்​டுள்ள இதன் சந்தை மதிப்பு ரூ.5 ஆயிரம் கோடி​யாக உள்​ளது. சந்​திர​பாபு நாயுடு மனைவி புவனேஸ்​வரி நாரா வசம் 2.26 கோடி பங்​கு​கள் (24.37%) உள்​ளன.

இந்​நிலை​யில், கடந்த வியாழக்​கிழமை வர்த்​தகத்​தின் இடையே இந்​நிறு​வனத்​தின் ஒரு பங்கு விலை 10% வரை உயர்ந்​தது. புதன்​கிழமை ரூ.485 ஆக முடிவடைந்த ஒரு பங்​கின் விலை, வியாழக்​கிழமை வர்த்​தகத்​தின் இடையே ரூ.541.60 வரை உயர்ந்​தது. இறு​தி​யில் சற்று குறைந்து ரூ.527-ல் நிலை பெற்​றது. இதன் மூலம், புவனேஸ்​வரி​யின் சொத்து மதிப்பு ஒரே நாளில் ரூ.121 கோடி உயர்ந்​தது.

ஹெரிடேஜ் நிறு​வனம், புதுப்​பிக்​கத்​தக்க எரிசக்தி மற்​றும் விலங்​கு​களுக்​கான உணவுப்​பொருள் உற்​பத்​தி​யிலும் ஈடு​பட்​டுள்​ளது. நடப்பு நிதி​யாண்​டின் முதல் காலாண்​டில் இந்​நிறு​வனத்​தின் வரு​வாய் ரூ.1,136.8 கோடி​யாக அதி​கரித்​தது. இதன்​மூலம் தொடர்ந்து 3-வது காலாண்​டாக இரட்டை இலக்க வளர்ச்​சி​யை எட்​டி உள்​ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x