Published : 21 Sep 2025 01:12 AM
Last Updated : 21 Sep 2025 01:12 AM

பார்வையற்ற யாசகரால் மனைவிக்கு ஜீவனாம்சம் வழங்க முடியாது: கேரள உயர் நீதிமன்றம் தீர்ப்பு

கொச்சி: கேரளா​வின் குட்​டிப்​புரத்தை சேர்ந்​தவர் சைதல​வி. முஸ்​லிம் மதத்தை சேர்ந்த பார்​வையற்ற இவர் மசூ​தி​களில் யாசகம் பெற்று வாழ்ந்து வரு​கிறார். சில ஆண்​டு​களுக்கு முன்பு ஜூபைரியா என்ற பெண்ணை இவர் திரு​மணம் செய்​தார். இதன்​பிறகு 2-வது திரு​மணம் செய்து கொண்​டார். தற்​போது 3-வது திரு​மணத்​துக்கு தயா​ரா​வ​தாகக் கூறப்​படு​கிறது.

இந்த சூழலில் முதல் மனைவி ஜூபைரியா ஜீவ​னாம்​சம் கோரி கேரள உயர் நீதி​மன்​றத்​தில் வழக்கு தொடர்ந்​தார். இந்த வழக்கை நீதிபதி குண்ணிகிருஷ்ணன் விசா​ரித்​தார். ஜூபைரியா நீதி​மன்​றத்​தில் கூறும்​போது, “எனது கணவர் சைதலவி யாசகம் மூலம் ஒரு மாதத்​தில் ரூ.25,000 -க்​கும் அதி​க​மாக வரு​வாய் ஈட்​டு​கிறார். இதில் ரூ.10,000-ஐ எனக்கு ஜீவ​னாம்​ச​மாக வழங்க வேண்​டும்’’ என்று வாதிட்​டார்.

இருதரப்பு வாதங்​களை​யும் கேட்ட நீதிபதி குனிகிருஷ்ணன் நேற்று முன்​தினம் தீர்ப்பு வழங்​கி​னார். அந்த தீர்ப்​பில் கூறி​யிருப்​ப​தாவது: யாசகம் பெற்று வாழும் பார்​வையற்ற நபரால் மனை​விக்கு ஜீவ​னாம்​சம் வழங்க முடி​யாது. இதுதொடர்​பாக எந்த உத்​தர​வை​யும் பிறப்​பிக்க முடி​யாது. மனு​தா​ரர் ஜூபைரி​யா​வின் வாழ்​வா​தா​ரத்​துக்கு தேவை​யான உதவி​களை மாநில அரசு வழங்க வேண்​டும்.

யாசகர் சைதலவி பலதார திரு​மணம் செய்​வதை ஒரு​போதும் ஏற்​றுக் கொள்ள முடி​யாது. இரு மனை​வி​களுக்கு அவர் மிரட்​டல் விடுத்​திருப்​பதை நீதி​மன்​றம் மிக வன்​மை​யாக கண்​டிக்​கிறது. இது​போன்ற செயல்​களில் அவர் ஈடு​படக்​கூ​டாது. அவர் தனது 2-வது மனை​வி​யுடன் சேர்ந்து வாழ குடும்ப நல நீதி​மன்​றம் தகுந்த ஆலோ​சனை​களை வழங்க வேண்​டும். யாசகம் பெற்று வாழ்​வதை தடுக்க கேரள அரசு நடவடிக்கை எடுக்க வேண்​டும். இவ்​வாறு தீர்ப்​பில்​ தெரிவிக்​கப்​பட்​டு உள்​ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x