Published : 21 Sep 2025 01:10 AM
Last Updated : 21 Sep 2025 01:10 AM

சபரிமலை கோயில் ரூ.1,033 கோடியில் சீரமைப்பு: கேரள முதல்வர் பின​ராயி விஜயன் அறிவிப்பு

கேரள மாநிலம் பத்தனம்திட்டா மாவட்டம் பம்பையில் நேற்று நடைபெற்ற உலக ஐயப்ப பக்தர்கள் மாநாட்டை கேரள முதல்வர் பினராயி விஜயன் தொடங்கிவைத்தார். நிகழ்ச்சியில் தமிழக அமைச்சர்கள் சேகர்பாபு, பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

பத்தனம்திட்டா: கேரள அரசும் திரு​வி​தாங்​கூர் தேவஸ்​தான​மும் இணைந்து நடத்​தும் சர்​வ​தேச ஐயப்ப பக்​தர்​கள் சங்​கமம் நிகழ்ச்சி பத்​தனம்​திட்டா மாவட்​டம் பம்​பை​யில் நேற்று காலை தொடங்​கியது. முதல்​வர் பின​ராயி விஜயன் சங்​கமத்தை தொடங்​கி​வைத்​தார். இதில், தமிழக அமைச்​சர்​கள் சேகர் பாபு, பி.டி.ஆர். பழனிவேல் தியாக​ராஜன் ஆகியோர் கலந்து கொண்​டனர்.

இந்த நிகழ்ச்​சி​யில் கேரள முதல்​வர் பின​ராயி விஜயன் பேசி​ய​தாவது: சபரிமலை ஐயப்​பனை தரிசிக்க வரும் பக்​தர்​களின் எண்​ணிக்கை கூடிக்​கொண்டே இருப்பதால் 2011-12-ம் ஆண்​டில் சபரிமலை மாஸ்​டர் பிளான் தொடங்​கப்​பட்​டது.

சபரிமலை மாஸ்​டர் பிளான் என்​பது சன்​னி​தானம், பம்​பை, பாரம்​பரிய பாதைகள், நிலக்​கல் ஆகிய​வற்​றின் ஒருங்​கிணைந்த வளர்ச்​சியை மைய​மாகக் கொண்​டது. 2050-க்​குள் இந்த திட்​டங்​கள் நிறைவடை​யும். இந்​தத் திட்​டத்​துக்​காக ரூ.1,033.62 கோடியை செலவு செய்ய கேரள அரசு முடிவு செய்​துள்​ளது. சன்​னி​தான மேம்​பாட்​டுக்​காக முதல் கட்​ட​மாக 2022-27-க்​குள் ரூ.600.47 கோடி​யும், இரண்​டாம் கட்​ட​மாக 2028-33-க்​குள் ரூ.100.02 கோடி​யும், மூன்​றாம் கட்​ட​மாக 2024-39-க்​குள் ரூ.77.68 கோடி​யும் ஒதுக்​கப்​படும்.

பம்​பையை பொறுத்​தவரை, ரூ.207.97 கோடி மதிப்​பீட்​டில் மேம்​படுத்​தப்​படும். மலை​யேற்​றப் பாதையை மேம்​படுத்த ரூ.47.97 கோடி ஒதுக்​கப்​படும். ஒட்​டுமொத்​த​மாக சன்​னி​தானம், பம்​பை, மலை​யேற்​றப் பாதைகள் ஆகிய​வற்​றின் மேம்​பாட்​டுக்​காக ரூ.1,033.62 கோடி செல​விடப்பட இருக்​கிறது. இந்​தத் திட்​டத்​தில் பக்​தர்​களின் வசதிக்​காக பல்​வேறு திட்​டங்​களை​யும் செயல்​படுத்த உள்​ளோம். இவ்​வாறு முதல்​வர்​ பின​ரா​யி விஜயன்​ தெரிவித்​தார்​.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x