Published : 21 Sep 2025 12:55 AM
Last Updated : 21 Sep 2025 12:55 AM

நாடு முழுவதும் மருத்துவர் எண்ணிக்கையை சீராக உயர்த்த மத்திய அரசு உறுதி: தேசிய மருத்துவ ஆணைய தலைவர் தகவல்

புதுடெல்லி: டெல்​லி​யில் உள்ள அடல் பிஹாரி வாஜ்​பாய் மருத்​துவ அறி​வியல் மையம் மற்​றும் டாக்​டர் ராம் மனோகர் லோகியா மருத்​து​வ​மனை​யின் 11-வது பட்​டமளிப்பு விழா நேற்று நடைபெற்றது.

இதில் தேசிய மருத்​துவ ஆணைய தலை​வர் டாக்​டர் அபிஜத் ஷேத் தலைமை தாங்​கி​னார். இந்​நிகழ்ச்​சி​யில் அவர் கூறிய​தாவது: ஆயிரம் பேருக்கு ஒரு மருத்​து​வர் என்ற உலக சுகா​தார நிறு​வனத்​தின் பரிந்​துரைப்​படி நாடு முழு​வதும் மருத்​து​வர்​களின் எண்​ணிக்​கையை சீராக உயர்த்த மத்​திய அரசு உறு​திபூண்​டுள்​ளது. இளநிலை மற்​றும் முது​நிலை மருத்​துவ மாணவர்​களின் விகிதத்​தை​யும் 1:1 என்​பதை அடைவதற்​கான முயற்​சிகள் நடை​பெற்​றுக் கொண்​டிருக்​கின்​றன.

இதன் மூலம் வளர்ந்த நாடு​களுக்கு இணை​யாக இந்​தி​யா​வின் சுகா​தார அமைப்பின் தரம் உயரும். திறன் அடிப்​படையி​லான மருத்​துவ கல்​வி​யின் தேவை​களை நிறைவேற்ற புதிய நடவடிக்​கைகளை மருத்​துவ அறி​வியல் தேர்வு வாரிய​மும், தேசிய மருத்​துவ ஆணை​ய​மும் அறி​முகம் செய்து வரு​கிறது. மாணவர்​கள் தங்​கள் உடல் நலனில் அக்​கறை செலுத்​தி, வாழ்​நாள் முழு​வதும் கற்​றுக்​கொள்​ளும் நபர்​களாக இருக்க வேண்​டும். இவ்​வாறு அவர் கூறி​னார்.

சுகா​தா​ரத்​துறை தலைமை இயக்​குநர் டாக்​டர் சுனிதா சர்மா பேசுகை​யில், ‘‘இன்று மருத்​து​வர் பட்​டம் பெற்​றவர்​கள், மற்​றவர்​களை குணப்​படுத்​தும் பொறுப்பை ஏற்று நாட்​டுக்கு சேவை செய்ய வேண்​டும். உங்​கள் பணி உணர்​வுட​னும், சிறப்​பாக​வும் இருக்​கட்​டும். நீங்​கள் உங்​கள் வாழ்க்​கை​யில் பணிவுடன் இருந்து மனித குலத்​துக்கு சேவை​யாற்​ற வேண்​டும்’’ என்​றார்​.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x