Published : 21 Sep 2025 12:51 AM
Last Updated : 21 Sep 2025 12:51 AM

இந்தியா தற்சார்பு நாடாக மாற வேண்டும்: குஜராத்தில் ரூ.34,200 கோடி திட்டங்களை தொடங்கி பிரதமர் மோடி பேச்சு

பாவ்நகர்: ‘‘பிற நாடு​களைச் சார்ந்​திருப்​பது​தான் இந்​தி​யா​வின் முக்​கிய எதிரி. நாம் சந்​திக்​கும் நூற்​றுக்​கணக்​கான பிரச்​சினை​களுக்கு ஒரே மருந்து தற்​சார்பு இந்​தி​யா​தான்’’ என பிரதமர் மோடி கூறி​யுள்​ளார்.

குஜ​ராத்​தின் பாவ்​நகரில் ‘சமுத்ர சே சம்​ரி​தி’ (கடலில் இருந்து வளம்) நிகழ்ச்​சியை பிரதமர் மோடி நேற்று தொடங்கி வைத்​தார். அப்​போது ரூ.34,200 கோடி மதிப்​பிலான கடல்​சார் மற்​றும் பிராந்​திய வளர்ச்சி திட்​டங்​களுக்கு அவர் அடிக்​கல் நாட்​டி​னார்.

இந்​நிகழ்ச்​சி​யில் பிரதமர் மோடி பேசி​ய​தாவது: விஸ்​வபந்து (உல​கின் நண்​பன்) என்ற உணர்​வுடன் நாடு தற்​போது முன்​னேறிக் கொண்​டிருக்​கிறது. இந்த உலகில் நமக்கு முக்​கிய எதிரி​கள் யாரும் இல்​லை. பிற நாடு​களைச் சார்ந்​திருப்​பது​தான் நமது மிகப் பெரிய எதிரி. இதை நாம் தோற்​கடிக்க வேண்​டும். வெளி​நாடு​களைச் அதி​கம் சார்ந்​திருப்​பது, நமது தோல்​வியைத்​தான் காட்​டு​கிறது. உலகளா​விய அமை​தி, நிலைத்​தன்​மை, செழிப்பு ஆகிய​வற்​றுக்கு உலகின் அதிக மக்​கள் தொகையை கொண்ட இந்​தியா தற்​சார்பு நாடாக மாற வேண்​டும்.

நாம் பிற​நாடு​களைச் சார்ந்​திருந்​தால், நமது சுய கவுர​வம்​தான் பாதிக்​கும். 140 கோடி மக்​களின் எதிர்​காலத்தை நாம் பிறரிடம் விட முடி​யாது. மற்​றவர்​களை சார்ந்​திருக்க கூடாது. எதிர்​கால தலை​முறை​யினரின் எதிர்​காலத்தை நம்​மால் அபாய கட்​டத்​தில் விட முடி​யாது. நமது நூற்​றுக்​கணக்​கான பிரச்​சினை​களுக்கு ஒரே மருந்து தற்​சார்பு இந்​தி​யா​தான்.

இதற்கு முன்பு ஆட்சி செய்த காங்​கிரஸ் அரசு, நாட்​டின் பலத்தை நீண்ட கால​மாக அறிய​வில்​லை. உலகமய​மாக்​கல் தொடங்​கிய போது, இறக்​குமதி பாதையை அந்த அரசு தேர்ந்​தெடுத்​தது. மேலும் பல கோடி மதிப்​பிலான ஊழல்​களி​லும் ஈடு​பட்​டது. நாட்​டின் உண்​மை​யான பலத்​துக்கு காங்​கிரஸின் கொள்கை தடை​யாக இருந்​தது.

கடல்​வளத்​திலிருந்து தொடங்​கும் இந்​தி​யா​வின் பயணத்தை வெளிக்​காட்​டும் இந்த முக்​கிய நிகழ்ச்​சி​யின் மைய​மாக பாவ்​நகர் தேர்வு செய்​யப்​பட்​டுள்​ளது. எனது 75-வது பிறந்​த​நாளை முன்​னிட்டு குஜ​ராத்​தில் 1 லட்​சம் பேர் ரத்த தானம் வழங்​கி​யுள்​ளனர். பல நகரங்​களில் தூய்மை நிகழ்ச்​சிகளுக்கு ஏற்​பாடு செய்​யப்​பட்​டுள்​ளது. குஜ​ராத்​தில் 30,000-க்​கும் மேற்​பட்ட இடங்​களில் மருத்​துவ முகாம்​களுக்கு ஏற்​பாடு செய்​யப்​பட்​டுள்​ளது. இந்​தப் பணி​யில் ஈடு​பட்​டுள்​ள அனை​வருக்​கும்​ நன்​றி. இவ்​வாறு பிரதமர்​ மோடி கூறி​னார்​.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x