Published : 20 Sep 2025 09:47 AM
Last Updated : 20 Sep 2025 09:47 AM

மைசூரு தசராவை தொடங்கி வைக்க பானு முஷ்டாக் அழைக்கப்பட்டதை எதிர்த்த மனு தள்ளுபடி

புதுடெல்லி: எச்.எஸ். கவுரவ் என்​பவர் உச்ச நீதி​மன்​றத்​தில் தாக்​கல் செய்த மேல்​முறை​யீட்டு மனு​வில் கூறி​யிருப்​ப​தாவது: சாமுண்​டீஸ்​வரி கோயி​லில் மைசூரு தசரா விழாவை தொடங்கி வைப்​பவர் இந்​து​வாக இருக்க வேண்​டும்.

ஆனால், இவ்விழாவை தொடங்கிவைக்க அழைக்கப்பட்டுள்ள எழுத்​தாளர் பானு முஷ்​டாக் முஸ்​லிம் என்​ப​தால் இந்து மதப் பூஜைகளைச் செய்ய முடி​யாது. இது மரபை மீறு​வ​தாகும். இதனால் இந்​துக்​களின் உணர்​வு​கள் புண்​படும். இவ்​வாறு அவர் அதில் தெரி​வித்​துள்​ளார்.

இந்த மேல்​முறை​யீட்டு மனுவை உச்ச நீதி​மன்ற நீதிப​தி​கள் விக்​ரம் நாத், சந்​தீப் மேத்தா ஆகியோர் அமர்வு நேற்று விசா​ரித்​தது. அப்​போது நீதிப​தி​கள், அரசமைப்பு சாசன முகப்​புரை என்ன சொல்​கிறது? அரசு நடத்​தும் விழா​வில் எப்​படி பாகு​பாடு இருக்க முடி​யும்? என்று கேட்​டனர். மனு​தா​ரர் தரப்பு மூத்த வழக்​கறிஞர் பி.பி. சுரேஷ் ஆஜராகி, கோயிலுக்​குள் நடக்​கும் பூஜை மதசார்​பற்​ற​தாகி விடாது.

பூஜை என்​பது மைசூர் தசரா விழா​வின் ஒரு பகு​தி​யாகும். விழாவுக்கு அழைக்​கப்​படும் நபர் எங்​கள் மதத்​துக்கு எதி​ராக கருத்து தெரி​வித்​துள்​ளார். இது​போன்ற சூழலில் அவரை அழைக்க முடி​யாது என வாதிட்​டார்.

வழக்​கறிஞரின் வாதத்தை நிராகரித்த நீதிப​தி​கள், மைசூரு தசராவை தொடங்கி வைக்க புக்​கர் பரிசு பெற்ற எழுத்​தாளர் பானு முஷ்​டாக் அழைக்​கப்​பட்​டதை எதிர்த்த மேல்​முறை​யீட்டு மனுவை தள்​ளு​படி செய்​து உத்​தர​விட்​டனர்​.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x