Published : 20 Sep 2025 09:24 AM
Last Updated : 20 Sep 2025 09:24 AM
மும்பை: மும்பை - அகமதாபாத் நெடுஞ்சாலையில் தானே-கோட்பந்தர் சாலை இணையும் பகுதியில் கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதனால் இப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது.
இந்நிலையில் மகாராஷ்டிரா வின் பல்கார் மாவட்டம் நைகானில் உள்ள கேலக்ஸி மருத்துவமனையில் 16 மாத ஆண் குழந்தை ஒன்று கடுமையான இடுப்பு காயங்களுடன் சிகிச்சை பெற்று வந்தது.
இக்குழந்தை மேல் சிகிச்சைக்காக மும்பையில் உள்ள ஒரு மருத்துவமனைக்கு நேற்று முன்தினம் அவசரமாக கொண்டு செல்லப்பட்டது. இந்நிலையில் மும்பை - அகமதாபாத் நெடுஞ்சாலையில் குறிப்பிட்ட பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதில் 5 மணி நேரத்துக்கும் மேலாக ஆம்புலன்ஸ் வாகனம் சிக்கியது. இதில் அக்குழந்தை இறந்தது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT