Published : 20 Sep 2025 05:47 AM
Last Updated : 20 Sep 2025 05:47 AM

ஆகம கோயில்களை கண்டறியும் குழுவில் கோவிலூர் மடாலய மடாதிபதி: உச்ச நீதிமன்றம் பரிந்துரை

புதுடெல்லி: ஆகம கோயில்​களைக் கண்​டறி​யும் குழு​வின் உறுப்​பின​ராக காரைக்​குடி கோவிலூர் மடால​யத்​தின் மடா​திபதி ஸ்ரீலஸ்ரீ நாராயண ஞான தேசிக சுவாமிகளை நியமிக்க உச்ச நீதி​மன்​றம் பரிந்​துரைத்​துள்​ளது. ஆகம விதி​களைப் பின்​பற்​றும் கோயில்​களில் அர்ச்​சகர்​களை நியமிக்​கும்​போது ஆகம விதி​களை கட்​டா​யம் பின்​பற்ற வேண்​டும் எனக்​கோரி அகில இந்​திய சிவாச்​சா​ரி​யார்​கள் சேவா சங்​கம் உள்​ளிட்​டவை சார்​பில் உச்ச நீதி​மன்​றத்​தில் வழக்​கு​கள் தொடரப்​பட்​டன.

இந்த வழக்​கு​களை ஏற்​கெனவே விசா​ரித்த உச்ச நீதி​மன்​றம் தமிழகத்​தில் ஆகம விதி​களை கடைபிடிக்​கும் கோயில்​களை​யும், ஆகமம் அற்ற கோயில்​களை​யும் கண்​டறிய சென்னை உயர் நீதி​மன்​றம் நியமித்த குழு​வுக்கு மூன்று மாத காலம் அவகாசம் அளித்​தது. அத்​துடன் ஆகமம் அல்​லாத கோயில்​களில் அனைத்து சாதி​யினரை​யும் அர்ச்​சகர்​களாக நியமிக்க உத்​தர​விட்​டது.

இந்​நிலை​யில் ஆகம விதி​களைப் பின்​பற்​றும் மற்​றும் பின்​பற்​றாத கோயில்​களை கண்​டறிய அமைக்​கப்​பட்ட குழு​வில் இடம்​பெற்ற ஜெ.முரு​கவேலின் நியமனத்தை ரத்து செய்​யக்​கோரி அகில இந்​திய சிவாச்​சா​ரி​யார்​கள் சேவா சங்​கம் சார்​பில் தாக்​கல் செய்​யப்​பட்ட இடை​யீட்டு மனு மீதான விசா​ரணை நீதிப​தி​கள் எம்​.எம்​.சுந்​தரேஷ், சதீஷ் சந்​திர சர்மா ஆகியோர் அடங்​கிய அமர்வு பிறப்​பித்​துள்ள உத்​தர​வில், ‘‘இந்​தக்​குழு உறுப்​பின​ராக ஜெ. முரு​கவேலின் நியமனத்​துக்கு மனு​தா​ரர் மட்​டுமின்றி குழு​வின் தலை​வரும் ஆட்​சேபம் தெரி​வித்​துள்​ள​தால் அவரது நியமனத்தை நாங்​களும் நிராகரிக்​கிறோம்.

எனவே முரு​கவேலுக்​குப் பதிலாக அக்​குழு​வின் உறுப்​பின​ராக காரைக்​குடி கோவிலூர் மடால​யத்​தின் மடா​திபதி ஸ்ரீலஸ்ரீ நாராயணஞான தேசிக சுவாமிகளை நியமிக்க தமிழக அரசுக்​கு பரிந்​துரை செய்​கிறோம்’’ என உத்​தரவிட்டுள்ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x