Published : 19 Sep 2025 08:53 AM
Last Updated : 19 Sep 2025 08:53 AM

பிரதமர் நரேந்திர மோடியின் பிறந்த நாளில் காசி விஸ்வநாதர் கோயிலில் சிறப்பு பூஜை, வழிபாடு

புதுடெல்லி: பிரதமர் நரேந்​திர மோடி​யின் பிறந்த நாளை முன்னிட்டு காசி விஸ்​வ​நாதர் கோயி​லில் சிறப்பு பூஜை, வழி​பாடு​கள் நடை​பெற்​றன. பிரதமர் நரேந்​திர மோடி நேற்று முன்​தினம் தனது 75-வது பிறந்த நாளை கொண்​டாடி​னார். இதையொட்டி உத்தர பிரதேசம், வாராணசி​யில் உள்ள காசி விஸ்​வ​ நாதர் கோயில் நிர்​வாகம் மற்​றும் கோயில் சேவைத் திட்​டத்​துடன் தொடர்​புடைய நிறு​வனங்​கள் மற்​றும் பல்​வேறு சேவை அமைப்​பு​கள் சார்​பில் பூஜை வழி​பாடு​கள் நடத்​தப்​பட்​டன.

கோயி​லின் பொதுச் செய​லா​ளர் சுவாமி ஜிதேந்​தி​ரானந்த சரஸ்​வதி சார்​பில் சஹஸ்​ரசண்டி வழி​பாடு, அகில பாரத சன்​யாசி பரிஷத் நடத்​தப்​பட்​டன. உத்தர பிரதேச முன்​னாள் அமைச்​சரும் தெற்கு வாராணசி​யின் எம்​எல்​ஏவு​மான நீல​காந்த் திவாரி தலை​மை​யில் 51 அறிஞர்​களின் உதவி​யுடன் யாகம் நடத்​தப்​பட்​டது. மேலும் நீல​காந்த் திவாரி தலை​மை​யில் 51 குவிண்​டால் லட்டு பிர​சாதம் விநி​யோகம் செய்​யப்​பட்​டது.

காசி விஸ்​வ​நாதர் கோவிலூர் அறக்​கட்​டளை சார்​பில் லட்டு பிர​சாதம் விநி​யோகம் செய்​யப்​பட்​டது. இதன்​படி வாராணசி​யில் உள்ள 59 சம்​ஸ்​கிருத பள்​ளி​களின் மாணவர்​கள், ஆசிரியர்​கள், ஊழியர்​கள் மற்​றும் பிஎச்யு மருத்​து​வ​மனை, பாபா புற்​று​நோய் மருத்​து​வ​மனை, டாடா நினைவு புற்​று​நோய் மருத்​து​வ​மனை​யில் சிகிச்சை பெறும் நோயாளி​களுக்கு 10,000 லட்​டு​கள் வழங்​கப்​பட்​டன.

சங்​கவேத வித்​யாலயா (தி​ரா​விட ஜி) சார்​பில் சிரஞ்​சீவி வழி​பாடு நடத்​தப்​பட்​டது. மேலும் ஷோடசோப​சார வழி​பாடு, நவக்​கிரக ஸ்தோத்​திர பாராயணம், 10,000 மிருத்​யுஞ்சய கீர்த்​தனை​கள் மற்​றும் அபிஷேகம் நடை​பெற்​றது. சங்​கவேத வித்​யாலயா சார்​பில் தெய்வ வழி​பாடு மற்​றும் மகா மிருத்​யுஞ்சய ஹோமம் நடத்​தப்​பட்​டது. வெங்கட ராமன் கணப​தி​யின் சிவ மஹிம்​னா ஸ்தோத்​திர பா​ராயணம்​ நடை​பெற்​றது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x