Published : 19 Sep 2025 08:53 AM
Last Updated : 19 Sep 2025 08:53 AM

ஹுரியத் முன்னாள் தலைவர் இறு​திச் சடங்​கில் பங்கேற்பதை தடுக்க காஷ்மீரில் மெகபூபா உள்ளிட்ட தலைவர்களுக்கு வீட்டுக்காவல்

ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரில் ஹுரி​யத் முன்​னாள் தலை​வர் அப்​துல் கனி பட்மறைவை முன்​னிட்​டு, பிரி​வினை​வாத ஆதரவு தலை​வர்​கள் ஒன்று கூடு​வதை தடுக்க, முன்​னாள் முதல்​வர் மெகபூபா முப்​தி, மக்​கள் மாநாட்டு கட்சி தலை​வர் சாஜத் லோன் உட்பட பலர் நேற்று வீட்​டுக் காவலில் வைக்​கப்​பட்​டனர்.

ஹுரி​யத் மாநாட்டு கட்​சி​யின் முன்​னாள் தலை​வர் அப்​துல் கனி பட் உடல்நிலை பாதிப்பு காரண​மாக சோப்​பூரில் உள்ள அவரது இல்​லத்​தில் நேற்று முன்​தினம் இறந்​தார். இவரது இறு​திச் சடங்​கில் பிரி​வினை​வாத ஆதரவு தலை​வர்​கள் ஒன்று கூடு​வதை தவிர்க்க காஷ்மீரில் அரசி​யல் தலை​வர்​கள் சிலர் நேற்று வீட்​டுக் காவலில் வைக்​கப்​பட்​டனர்.

காஷ்மீர் முன்​னாள் முதல்​வர் மெகபூபா முப்​தி, மக்​கள் மாநாட்டு கட்​சி​யின் தலை​வர் சாஜத் லோன், ஹுரி​யத் மாநாட்டு கட்​சி​யின் தற்​போதைய தலை​வர் மிர்​வைஸ் உமர் பரூக் ஆகியோர் நேற்று முன்​தினம் இரவு முதல் வீட்​டுக் காவலில் வைக்​கப்​பட்​டனர்.

இதுகுறித்து எக்ஸ் தளத்​தில் மெகபூபா முப்தி வெளி​யிட்​டுள்ள செய்​தி​யில் கூறி​யிருப்​ப​தாவது: மறைந்த தலை​வர் அப்​துல் கனி பட் மறைவுக்கு இரங்​கல் தெரி​விப்​பதை தடுத்து நிறுத்​து​வதற்​காக அரசி​யல் தலை​வர்​களை வீட்​டுக்​காவலில் வைக்​கும் முடிவு மோச​மானது. ஜம்மு காஷ்மீரில் ஜனநாயகம் இல்லை என்​பதை இது காட்​டு​கிறது. ஹஸ்​ரத்​பால் தர்​கா​வில் நடந்த சம்​பவம் மக்​களின் கோபத்தை காட்​டி​யுள்​ளது. மக்​களின் ஆழ்ந்த கோபத்​திலிருந்து எதை​யும் கற்​றுக்​கொள்ள மறுக்​கும் பாஜக, மக்​களின் நீண்​ட​கால உணர்​வு​களை அடக்​கு​கிறது.

காஷ்மீரில் அமை​தியை ஏற்​படுத்த பாஜகவுக்கு ஆர்​வம் இல்​லை. அரசி​யல் காரணங்​களுக்​காக காஷ்மீரை எப்​போதும் பதற்ற நிலை​யிலேயே வைத்​துள்​ளது. இது அபாயகர​மானது. இவ்​வாறு அவர் கூறி​யுள்​ளார். சாஜத் லோன் எக்ஸ் தளத்​தில் விடுத்​துள்ள தகவலில், ‘‘பேராசிரியர் அப்​துல் கனி பட் இரங்​கல் கூட்​டத்​தில் பங்​கேற்​பதை தடுப்​ப​தற்​காக நான் வீட்​டுக் காவலில் வைக்​கப்​பட்​டுள்​ளேன். இதை என்​னால் புரிந்​து​கொள்ள முடிய​வில்​லை. அவருக்கு இறுதி அஞ்​சலி செலுத்த எங்​களுக்கு உரிமை உள்​ளது’’ என்றார்.

ஹுரி​யத் அமைப்​பின் தலை​வர் மிர்​வைஸ் உமர் பரூக் விடுத்​துள்ள செய்​தி​யில், ‘‘அப்​துல் கனி பட் இறுதிச் சடங்கை விரை​வில் முடிக்​கச் சொல்லி அவரது குடும்​பத்​தினரை அரசு அதி​காரி​கள் வற்​புறுத்​து​வது வேதனையளிக்​கிறது. எனது 35 ஆண்டு கால நண்​பர் மற்​றும் வழி​காட்​டி​யின் இறு​திச் சடங்​கில் பங்​கேற்​கும் உரிமை எனக்கு மறுக்​கப்​படு​கிறது. இது தாங்​கி​கொள்​ள முடி​யாத கொடூரம்​’’ என்​றார்​.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x