Published : 19 Sep 2025 08:24 AM
Last Updated : 19 Sep 2025 08:24 AM

பாகிஸ்தான் - சவுதி இடையே ராணுவ ஒப்பந்தம்: நாட்டு நலனை பாதுகாப்பதில் கவனம் செலுத்த மத்திய அரசு உறுதி

சவுதி அரேபிய இளவரசர் சல்மானை, பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் ரியாத்தில் நேற்று சந்தித்துப் பேசினார். அப்போது இரு நாடுகள் இடையே பாதுகாப்பு ஒப்பந்தம் கையெழுத்தானது. | படம்: பிடிஐ |

புதுடெல்லி: ​நாட்​டின் பாது​காப்​புக்​காக​வும், பிராந்​திய மற்​றும் உலகளா​விய நிலைத்​தன்​மைக்​காக​வும் பாகிஸ்​தான் - சவுதி அரேபியா இடையே​யான பாது​காப்பு ஒப்​பந்​தத்​தில் உள்ள விஷ​யங்​களை​யும், அதன் தாக்​கங்​களை​யும் இந்​தியா ஆய்வு செய்​யும் என வெளி​யுறவுத்​துறை தெரி​வித்​துள்​ளது.

பாகிஸ்​தான் - சவுதி அரேபியா இடையே பரஸ்பர பாது​காப்பு ஒப்​பந்​தம் கையெழுத்​தாகி​யுள்​ளது. அதில் பாகிஸ்​தான் அல்​லது சவுதி அரேபியா மீது தாக்​குதல் நடத்​தப்​பட்​டால், அது இரு நாடு​களுக்கு எதி​ரான தாக்​குதலாக கருதப்​படும்’’ என சவுதி அரேபியா இளவரசர் முகமது பின் சல்​மான் அப்​துலாசிஸ் மற்​றும் பாகிஸ்​தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் ஆகியோர் கூட்​டாக அளித்த பேட்டியில் தெரி​வித்​தனர். பாகிஸ்​தான் மீது இந்​தியா ஆபரேஷன் சிந்​தூர் தாக்​குதல் நடத்​திய 4 மாதங்​களுக்​குப்​பின் இந்த ஒப்பந்தம் பாகிஸ்​தான் - சவுதி அரேபியா இடையே கையெழுத்​தாகி​யுள்​ளது.

இது குறித்து இந்​திய வெளி​யுறவுத்​துறை செய​லா​ளர் ரந்​திர் ஜெய்​ஸ்​வால் கூறிய​தாவது: சவுதி அரேபியா - பாகிஸ்​தான் இடையேபரஸ்பர பாது​காப்பு ஒப்​பந்​தம் கையெழுத்​தாகி​யுள்ள செய்​தியை பார்த்​தோம். இரு நாடு​கள் இடையே நீண்​ட​கால​மாக பரிசீலனை​யில் இருந்த ஒப்​பந்​தம் தற்​போது கையெழுத்​தாகி​யுள்ளதை மத்​திய அரசு அறியும்.

நாட்​டின் பாது​காப்​புக்​காக​வும், பிராந்​திய மற்​றும் உலகளாவிய நிலைத்​தன்​மைக்​காக​வும் சவுதி அரேபியா - பாகிஸ்​தான் இடையே​யான பாது​காப்பு ஒப்​பந்​தத்​தில் உள்ள விஷ​யங்​களை​யும், அதன் தாக்​கங்​களை​யும் மத்​திய அரசு ஆய்வு செய்​யும். நாட்​டின் தேசிய நலனை பாது​காப்​ப​தி​லும், நாட்​டின் விரி​வான பாது​காப்பை உறுதி செய்​வ​தி​லும் மத்​திய அரசு உறு​தி​யுடன் உள்​ளது.
இவ்​வாறு அவர்​ கூறி​னார்​.

இஸ்ரேலுக்கு எதிரான ஒப்பந்தம் பாகிஸ்தான் - சவுதி அரேபியா இடையே ஏற்பட்டுள்ள பரஸ்பர பாதுகாப்பு ஒப்பந்தம் குறித்து ஆய்வாளர்கள் கூறியுள்ளதாவது: சவுதி அரேபியாவுடன் செய்து கொண்ட ஒப்பந்தத்தால், இந்தியாவுடன் போர் ஏற்பட்டால், சவுதி அரேபியா தனது எப்-15 மற்றும் டைபூன் ரக போர் விமானங்களை அனுப்பும் என பாகிஸ்தான் கனவு காணலாம். ஆனால், கள நிலரத்தை அறிந்து தான் இந்த விஷயத்தில் சவுதி அரேபியா முன்னுரிமை அளிக்கும்.

நேட்டோ படைகள் போல் அரபு மற்றும் இஸ்லாமிய நாடுகள் எல்லாம் ஒன்று சேர்ந்து தனிப்படை அமைக்க திட்டமிட்டு வருகின்றன. இஸ்ரேலை குறிவைத்தே, அணு ஆயுதம் வைத்துள்ள பாகிஸ்தானுடன் சவுதி அரேபியா பாதுகாப்பு ஒப்பந்தம் செய்துள்ளது. இது இந்தியாவை விட இஸ்ரேலை குறிவைத்து செய்யப்பட்ட ஒப்பந்தம். இவ்வாறு அவர்கள் கூறினர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x