Last Updated : 19 Sep, 2025 07:43 AM

1  

Published : 19 Sep 2025 07:43 AM
Last Updated : 19 Sep 2025 07:43 AM

கர்நாடக முன்னாள் முதல்வர் சதானந்த கவுடாவிடம் ஆன்லைனில் ரூ. 3 லட்சம் மோசடி

பெங்களூரு: கர்​நாடக முன்​னாள் முதல்​வரும் முன்​னாள் மத்​திய அமைச்​சரு​மான‌ சதானந்த கவு​டா​வின் வங்​கிக் கணக்கை ஆன்லைன் மூலம் ஹேக் செய்து ரூ.3 லட்​சம் திருடப்​பட்டு உள்​ளது. இதுகுறித்து பெங்​களூரு போலீ​ஸார் வழக்​குப்​ப​திவு செய்து விசாரணை நடத்தி வரு​கின்​றனர்.

இதுகுறித்து முன்​னாள் முதல்​வர் சதானந்த கவுடா பெங்​களூரு​வில் செய்​தி​யாளர்​களிடம் கூறிய​தாவது: புதன்​கிழமை காலை​யில் எனது செல்​போனுக்கு 3 வங்​கி​களிடம் இருந்து குறுஞ்​செய்தி வந்​தது. அதில் ஒவ்​வொரு வங்​கி​யில் இருந்​தும் தலா ரூ.1 லட்​சம் எடுக்கப்​பட்டு இருப்​ப​தாக கூறப்​பட்​டிருந்​தது. இதையடுத்து செல்​போன் செயலி மூலம் வங்கி கணக்கை ஆராய்ந்​த​போது, எனது வங்கி கணக்​கு​கள் மூன்​றும் ஹேக் செய்​யப்​பட்​டிருப்​பது தெரிய​வந்​தது.

உடனடி​யாக பெங்​களூரு வடக்கு மண்டல துணை காவல் கண்​காணிப்​பாளர் அலு​வல​கத்​தில் புகார் அளித்​துள்​ளேன். எனக்கு வங்கி கணக்​கு​கள் தொடர்​பாக யாருக்​கும் தகவல் தெரிவிக்​க​வில்​லை. அதே​போல எந்த லிங்​கை​யும் கிளிக் செய்​ய​வில்​லை. ஆன்​லைன் மோசடி கும்​பல், எப்​படி எனது வங்கி கணக்கை ஹேக் செய்​தார்​கள் என தெரிய​வில்​லை. போலீ​ஸார் உரிய நடவடிக்கை எடுப்​பார்​கள் என நம்​பு​கிறேன். இவ்​வாறு சதானந்த கவுடா தெரி​வித்​தார்.

இந்த ஆன்​லைன் மோசடி குறித்து பெங்​களூரு வடக்கு மண்டல போலீ​ஸார் 3 பிரிவு​களில் வழக்​குப்​ப​திவு செய்து விசா​ரணையை தொடங்​கி​யுள்​ளனர். முதல்​கட்​ட​மாக சதானந்த கவு​டா​வின் வங்கி கணக்​கு​கள், ஆன்​லைன் பணப் பரி​மாற்​றம் உள்​ளிட்​ட​வற்றை ஆராய்ந்து வரு​வ​தாக போலீ​ஸார் தெரி​வித்​தனர். கடந்த சில தினங்​களுக்கு முன்பு கன்னட நடிகர் உபேந்​தி​ரா, அவரது மனை​வி​யும் நடிகை​யு​மான பிரி​யங்கா திரிவேதி ஆகியோரின் செல்​போன் எண்​கள் ஹேக் செய்​யப்​பட்டு ரூ.55 ஆயிரம்​ மோசடி செய்​யப்​பட்​டது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x