Published : 19 Sep 2025 07:35 AM
Last Updated : 19 Sep 2025 07:35 AM

அதானி குழும விவகாரத்தில் நீதிமன்ற உத்தரவு கவலை அளிக்கிறது: எடிட்டர்ஸ் கில்டு ஆப் இந்தியா கருத்து

புதுடெல்லி: அ​தானி குழு​மம் பல்​வேறு முறை​கேடு​களில் ஈடு​படு​வ​தாக அமெரிக்​காவை சேர்ந்த ஹிண்​டன்​பர்க் நிறு​வனம் கடந்த 2023-ம் ஆண்டு குற்​றம் சாட்​டியது. அந்த நிறு​வனத்​தின் அறிக்​கையை மைய​மாக வைத்து பல்​வேறு ஊடகங்​களில் செய்​தி​கள், கட்​டுரைகள் வெளி​யிடப்​பட்​டன.

இதை எதிர்த்து அதானி எண்​டர்​பிரைசஸ் சார்​பில் டெல்லி வடமேற்கு மாவட்ட நீதி​மன்​றத்​தில் மனு தாக்​கல் செய்​யப்​பட்​டது. இதனை விசா​ரித்த நீதிபதி அனுஜ் குமார் சிங் கடந்த 6-ம் தேதி பிறப்​பித்த இடைக்​கால உத்​தர​வில் அதானி குழு​மத்துக்கு எதி​ரான அவதூறு செய்​தி​களை
வெளி​யிட தடை விதிக்​கப்​பட்​டது.

டெல்லி நீதி​மன்ற உத்​தர​வின் அடிப்​படை​யில் சம்​பந்​தப்​பட்ட ஊடகங்​களுக்கு மத்​திய தகவல், ஒலிபரப்​புத் துறை சார்​பில் நோட்​டீஸ் அனுப்​பப்​பட்டு உள்​ளது. அதில், 138 யூ டியூப் வீடியோக்​கள், 83 இன்​ஸ்​டாகி​ராம் பதிவு​களை 36 மணி நேரத்​தில் நீக்க உத்​தர​விடப்​பட்டு உள்​ளது. இதை எதிர்த்து செய்​தி​யாளர்​கள் தரப்​பில் டெல்லி வடமேற்கு மாவட்ட நீதி​மன்​றத்​தில் மேல் முறை​யீடு செய்​யப்​பட்டு உள்​ளது.

இந்த விவ​காரம் தொடர்​பாக எடிட்​டர்ஸ் கில்டு ஆப் இந்​தியா சார்​பில் நேற்று வெளி​யிடப்​பட்ட அறிக்​கை​யில் கூறி​யிருப்​ப​தாவது: அதானி எண்​டர்​பிரைசஸ் லிமிடெட் தொடர்​பாக டெல்லி மாவட்ட நீதி​மன்​றம் அண்​மை​யில் பிறப்​பித்த உத்​தரவு கவலை​யளிக்​கிறது. இந்த உத்​தரவு செய்​தி​யாளர்​கள், ஊடக நிறு​வனங்​களுக்கு எதி​ராக உள்​ளது. நீதி​மன்ற உத்​தரவை அடிப்​படை​யாக வைத்து சமூக வலைத்தள பதிவு​களை நீக்க மத்​திய தகவல்
ஒலிபரப்​புத் துறை உத்​தர​விட்டு உள்​ளது. இது கருத்து சுதந்​திரத்​துக்கு எதி​ரானது. இவ்​வாறு அறிக்​கை​யில் தெரிவிக்​கப்​பட்​டுள்​ளது.

செபி நிராகரிப்பு: அதானி குழு​மத்​தில் மோசடி அல்​லது நியாயமற்ற வர்த்தக நடை​முறை எது​வும் நடை​பெற​வில்லை என்​ப​தைக் குறிப்​பிட்​டு,
அதானி குழு​மத்​திற்கு எதி​ரான அனைத்து குற்​றச்​சாட்​டு​களை​யும் இந்​தி​யப் பங்கு மற்​றும் பரிவர்த்​தனை வாரி​யம் (செபி) நிராகரித்​துள்​ளது.

“ஹிண்​டன்​பர்க் அறிக்கை ஆதா​ரமற்​றது என்​பதை செபி​யின் ஆழமான விசா​ரணை உறு​திப்​படுத்​தி​யுள்​ளது. அதானி குழு​மம் எப்​போதும் வெளிப்​படைத்​தன்​மை, நேர்மை ஆகிய​வற்றை கடைபிடித்து வரு​கிறது” என அ​தானி குழும தலைவர்​ கவுதம்​ அ​தானி நேற்​று வெளியிட்​ட எக்​ஸ்​ பதிவில்​ தெரிவித்​துள்​ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x