Published : 19 Sep 2025 07:29 AM
Last Updated : 19 Sep 2025 07:29 AM

பிஹாரில் முதல்வர் நிதிஷ் குமார், மத்திய அமைச்சர் அமித் ஷா சந்திப்பு: தேர்தல் தொடர்பாக ஆலோசனை

பாட்னா: பிஹார் முதல்​வர் நிதிஷ் குமாரும் மத்​திய அமைச்​சர் அமித் ஷாவும் பாட்​னா​வில் நேற்று சந்​தித்​துப் பேசினர். அப்​போது சட்​டப்​பேர​வைத் தேர்​தல் தொடர்​பாக ஆலோ​சனை நடத்தி உள்​ளனர்.

பிஹார் சட்​டப்​பேர​வைக்​கான தேர்​தல் தேதி ஓரிரு வாரங்​களில் அறிவிக்​கப்பட உள்​ளது. இதையடுத்​து, அங்கு தேர்​தல் பிரச்​சா​ரம், அரசி​யல் கட்​சிகள் இடையி​லான தொகுதி உடன்​பாடு குறித்து பேச்​சு​வார்த்தை சூடு​பிடித்​துள்​ளது. பிஹாரில் பாஜக தலை​மையி​லான தேசிய ஜனநாயக கூட்​ட​ணி​யில் நிதிஷ் குமார் தலை​மையி​லான ஐக்​கிய ஜனதா தளம் இடம்​பெற்​றிருக்​கிறது.

இந்​நிலை​யில், நேற்று பாட்னா சென்ற மத்​திய உள் துறை அமைச்​சரும் பாஜக மூத்த தலை​வரு​மான அமித் ஷா ஒரு ஓட்​டலில் தங்கி இருந்​தார். இதையடுத்​து, பிஹார் முதல்​வரும் ஐக்​கிய ஜனதா தள தலை​வரு​மான நிதிஷ் குமார், அமித் ஷாவை ஓட்​டலில் சந்​தித்​துப் பேசி​னார். நிதிஷ் குமார், அமித் ஷாவுக்கு பூங்​கொத்து கொடுக்​கும் புகைப்​படத்தை இரு​வரும் எக்ஸ் சமூக வலை​தளத்​தில் பகிர்ந்​து
உள்​ளனர்.

இந்த சந்​திப்​பின் போது இரு தலை​வர்​களும் பேர​வைத் தேர்​தல் தொடர்​பாக ஆலோ​சனை நடத்​தி​ய​தாக தகவல் வெளி​யாகி உள்​ளது. அதே​நேரம் இருதரப்​பிலிருந்​தும் அதி​காரப்​பூர்​வ​மான தகவல் எது​வும் வெளி​யிடப்​பட​வில்​லை.

மத்​திய அமைச்​சர் அமித் ஷா மற்​றும் பாஜக தலை​வர் ஜே.பி.நட்டா ஆகியோர் கடந்த வாரம் பாட்னா சென்​றிருந்​தனர். அப்​போது அவர்​களை முதல்​வர் நிதிஷ் குமார் சந்​திக்க மறுத்​து​விட்​ட​தாக தகவல் வெளி​யானது. இந்த சூழ்​நிலை​யில்​தான் நிதிஷ் குமார், அமித் ஷாவை சந்​தித்​துள்​ளார் என்​பது குறிப்​பிடத்​தக்​கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x