Published : 18 Sep 2025 08:47 AM
Last Updated : 18 Sep 2025 08:47 AM

எதிர்காலத்தில் தீவிரவாத தாக்குதல் நடந்தால் ஆபரேஷன் சிந்தூர் தொடங்கும்: அமைச்சர் ராஜ்நாத் சிங் எச்சரிக்கை

புதுடெல்லி: ஹைத​ரா​பாத்தில் நேற்று நடை பெற்ற விடு​தலை தின சிறப்பு நிகழ்ச்​சி​யில் பாது​காப்பு அமைச்​சர் ராஜ்​நாத் சிங் பேசியதாவது: இந்​தி​யா​வுக்​கும் பாகிஸ்​தானுக்​கும் இடையி​லான போர் நிறுத்​தம் யாரோ ஒரு​வரின் தலை​யீட்​டால் ஏற்​பட்​டதா என்று சிலர் கேட்​கிறார்​கள். நான் அதை தெளிவுபடுத்த விரும்​பு​கிறேன்.

தீவிர​வா​தி​களுக்கு எதி​ரான நடவடிக்கை யாரோ ஒரு​வரின் தலை​யீட்​டால் நிறுத்​தப்​பட​வில்​லை. இன்​றைய இந்​தி​யா​விடம் எதிரி​களின் கண்​களைப் பார்த்து பதிலளிக்​கும் திறன் உள்​ளது.

இந்​தியா பாகிஸ்​தான் இடையே​யான மோதலை நிறுத்​தி​ய​தில் 3-ம் தரப்புக்கு பங்கு இல்லை என்​பதை இந்​தியா ஏற்​கெனவே திட்​ட​வட்​ட​மாகத் தெரி​வித்​துள்​ளது. அதைத்​தான் தற்​போது பாகிஸ்​தானும் ஒப்​புக்​கொண்​டுள்​ளது. எதிர்​காலத்​தில் ஏதேனும் தீவிர​வாத தாக்​குதல்​ நடந்​தால் ஆபரேஷன் சிந்​தூர் மீண்டும் தொடங்​கும்​. இதில்​ சமரசத்​துக்​கு இடமில்​லை. இவ்​​வாறு அமைச்சர் ​ராஜ்​நாத்​ கூறி​னார்​.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x