Published : 18 Sep 2025 07:36 AM
Last Updated : 18 Sep 2025 07:36 AM

ஆந்திராவில் கார் மீது லாரி மோதி சிறுவன் உட்பட 7 பேர் உயிரிழப்பு

நெல்லூர்: ஆந்​திர மாநிலம், நெல்​லூர் குர்​ரம்​வாரி வீதியை சேர்ந்த பால வெங்​கைய்யா (40) என்​பவரின் குடும்​பத்​தினர் கடப்பா மாவட்​டம், ஆத்​மகூர் எனும் ஊரில் உறவினர் ஒரு​வரின் குடும்​பத்​தாரை துக்​கம் விசா​ரிக்க காரில் நேற்று காலை புறப்​பட்​டனர்.

அப்​போது, நெல்​லூர் மாவட்​டம், சங்​கம் அருகே வெரமன் எனும் எனும் இடத்​தில், மும்பை தேசிய நெடுஞ்​சாலை​யில், சாலை​யின் எதிரே அதிவேக​மாக தவறான பாதை​யில் வந்த டிப்​பர் லாரி, இவர்​களின் கார் மீது வேக​மாக மோதி​யது. இதில் கார் டிப்​பர் லாரி​யின் அடி​யில் சிக்கி கொண்​டது.

இந்த கோர விபத்​தில், காரில் பயணம் செய்த பால வெங்​கைய்யா (40), இவரது மனைவி ராதா (38), இவரின் சகோ​தரர் நி​வாசுலு (42), நி​வாசுலு​வின் மனைவி லட்​சுமி (40), உறவினர் ஷேரம்மா (42), ஓட்​டுனர் தெல்ல குண்ட்ல நி​வாசுலு (48) மற்​றும் 4 வயது சிறு​வன் ஆகியோர் சம்பவ இடத்​திலேயே பரி​தாப​மாக உயி​ரிழந்​தனர். டிப்​பர் லாரி ஓட்​டுனரின் அலட்​சி​யமே இந்த விபத்​துக்கு காரணம் என முதற்​கட்ட விசா​ரணை​யில் தெரிய​வந்​துள்​ளது.

தகவல் அறிந்​ததும், ஆந்​திர முதல்​வர் சந்​திர​பாபு நாயுடு, துணை முதல்​வர் பவன் கல்​யாண் ஆகியோர் இறந்​தவர்​களின் குடும்​பத்​தா​ருக்கு ஆழ்ந்த இரங்​கல்​களை தெரி​வித்​ததோடு, இது குறித்து விசா​ரணை நடத்தி சட்​டப்​படி நடவடிக்கை எடுக்க உத்​தர​விட்​டுள்​ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x