Published : 18 Sep 2025 07:31 AM
Last Updated : 18 Sep 2025 07:31 AM

சைபர் குற்றவாளிகளின் வலையில் சிக்கி ரூ.6 லட்சம் பணத்தை இழந்த பெண் மருத்துவர் உயிரிழப்பு

ஹைதராபாத்: சைபர் குற்​ற​வாளி​களின் வலை​யில் சிக்கி ரூ.6.60 லட்​சம் பணத்தை ஏமாந்த பெண் மருத்​து​வர் மாரடைப்​பால் உயி​ரிழந்​தார்.

ஹைத​ரா​பாத்தை சேர்ந்த 76 வயதுள்ள ஒரு பெண் மருத்​து​வருக்கு கடந்த செப்​டம்​பர் மாதம் 6-ம் தேதி, பெங்​களூரு போலீஸ் சின்​னத்​துடன் ஒரு வாட்​ஸ்​ஆப் கால் வந்​துள்​ளது. அதில் பேசி​ய​வர்​கள், சிலரை வெளி​நாட்​டுக்கு விற்ற வழக்கு தொடர்​பாக உச்​சநீதி மன்​றம், ரிசர்வ் வங்​கி, கர்​நாடக போலீஸ் மற்​றும் அமலாக்​கத் துறை​யினரின் போலி கைது வாரண்ட்​களை வீடியோ கால் மூலம் காண்​பித்து உங்​களை ‘டிஜிட்​டல் கைது’ செய்​துள்​ளோம் என மிரட்டி உள்​ளனர். இதனால் பயந்து போன அவர், அவர்கள் கூறியபடி தன்​னுடைய ஓய்​வூ​தி​யத்​தில் இருந்து ரூ.6.60 லட்​சத்தை வங்கி கணக்​கிற்கு அனுப்பி உள்​ளார்.

போலி சைபர் குற்​ற​வாளி​கள் அவரை விடா​மல், தொடர்ந்து தொந்​தரவு கொடுத்​துள்​ளனர். இதனால், அந்த பெண் மருத்​து​வருக்கு கடந்த செப்​டம்​பர் மாதம் 8-ம் தேதி மாரடைப்பு ஏற்​பட்டு பரி​தாப​மாக உயி​ரிழந்​தார்.

இதனை அறி​யாத அந்த சைபர் குற்​ற​வாளி​கள், தொடர்ந்து மேசேஜ்கள் மூலம் மிரட்​டல் விடுத்​தனர். இதனால், பெண் மருத்​து​வரின் குடும்​பத்​தார் இது குறித்து சமீபத்​தில் ஹைத​ரா​பாத் சைபர் குற்​றப்​பிரி​வில் புகார் அளித்​தனர். இது தொடர்​பாக வழக்கு பதிவு செய்த போலீ​ஸார், குற்​ற​வாளி​களை பிடிக்க தனிப்​படை அமைத்து தீவிர​மாக தேடி வரு​கின்​றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x