Published : 18 Sep 2025 07:25 AM
Last Updated : 18 Sep 2025 07:25 AM
பாட்னா: ஏஐஎம்ஐஎம் கட்சியின் தலைவரும் ஹைதராபாத் எம்.பி.யுமான அசாதுதீன் ஒவைசி தங்களின் பிஹார் தேர்தல் திட்டம் குறித்து கூறியதாவது:
பிஹார் தேர்தலில் நாங்கள் போட்டியிட உள்ளோம். இத்தேர்தலில் இண்டியா கூட்டணியில் இணைந்து போட்டியிடுவது குறித்து ஆர்ஜேடி தலைவர் லாலுவுக்கு 2 முறையும் அவரது மகன் தேஜஸ்விக்கு ஒரு முறையும் கடிதம் எழுதினோம். இதுவரை பதில் இல்லை.
6 தொகுதிகளை ஏற்றுக்கொள்ள நாங்கள் தயாராக உள்ளோம். ஆட்சிக்கு வந்தால் அமைச்சரவையில் இடம் வேண்டாம், சீமாஞ்சல் வளர்ச்சி வாரியம் ஏற்படுத்தினால் போதும் என்று கூறினோம். இவ்வாறு அசாதுதீன் ஓவைசி கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT