Published : 17 Sep 2025 08:21 AM
Last Updated : 17 Sep 2025 08:21 AM

காலை தொட்டு வணங்காததால் ஆத்திரம்: மாணவர்களை அடித்த ஆசிரியை சஸ்பெண்ட்

புவனேஸ்வர்: ஒடி​சா​வில், தனது காலை தொட்டு வணங்​காத​தால் மாணவர்​களை அடித்த ஆசிரியை சஸ்​பெண்ட் செய்யப்பட்டுள்ளார். ஒடி​சா​வின் மயூர்​பஞ்ச் மாவட்​டம், பெட்​னோட்டி ஒன்​றி​யம் கண்​டதே​யுலா என்ற கிராமத்​தில் அரசு நடுநிலைப் பள்ளி உள்​ளது.

இப்​பள்​ளி​யில் கடந்த வெள்​ளிக்​கிழமை காலை இறைவணக்க கூட்​டத்​துக்கு பிறகு மாணவர்​கள் தங்​கள் வகுப்​பறை​களுக்கு திரும்பியுள்​ளனர். இந்​நிலை​யில் இப்​பள்​ளி​யின் ஆசிரியை ஒரு​வர் 6, 7 மற்​றும் 8-ம் வகுப்​பறை​களுக்கு சென்​று, பிரார்த்​தனைக்கு பிறகு தனது காலை ஏன் தொட்டு

வணங்​க​வில்லை என்று கேட்டு 31 மாணவர்​களை மூங்​கில் குச்​சி​யால் அடித்​து உள்​ளார். இதுபற்றி தெரிய​வந்த பெற்​றோர்​கள் பள்ளிக்கு விரைந்து சென்​று, அந்த ஆசிரியை மீது நடவடிக்கை எடுக்க வேண்​டும் என வலி​யுறுத்​தினர்.

மேலும் பெற்​றோர்​கள் அளித்த புகாரின் பேரில் பள்ளி மாணவர்​களிடம் உள்​ளூர் கல்​வித் துறை அதி​காரி​கள் விசா​ரணை நடத்​தினர். விசா​ரணை அறிக்​கை​யின் அடிப்​படை​யில் அந்த ஆசிரியையை அதி​காரி​கள் சஸ்​பெண்ட் செய்​துள்​ளனர்.

இதுகுறித்து கல்வித்துறை அதி​காரி​கள் கூறுகை​யில், “பள்​ளி​களில் மாணவர்​களுக்கு உடல்​ரீ​தி​யாக தண்​டனை கொடுப்​பது தடை செய்​யப்​பட்​டுள்​ளது. இது​போன்ற சம்​பவங்​கள் வேறு எந்​தப் பள்​ளி​யிலும் நிகழாமல் பார்த்​துக் கொள்​வோம்” என்​று தெரி​வித்​தனர்​.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x