Published : 17 Sep 2025 08:09 AM
Last Updated : 17 Sep 2025 08:09 AM

இமாச்சல், உத்தராகண்ட் மாநிலத்தில் நிலச்சரிவு: கனமழை, வெள்ளத்தால் போக்குவரத்து கடுமையாக பாதிப்பு

உத்தராகண்ட் மாநிலத்தில் நேற்று மேகவெடிப்பு காரணமாக சந்திரபாகா நதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. ரிஷிகேஷ் நகரில் சந்திரபாகா நதி வெள்ளத்தில் சிக்கிய வாகனங்களில் பரிதவித்த பயணிகளை தேசிய பேரிடர் மீட்புப் படை வீரர்கள் பத்திரமாக மீட்டனர். | படம்: பிடிஐ |

புதுடெல்லி: இமாச்சல பிரதேசம், ஜம்மு காஷ்மீர், பஞ்​சாப், டெல்​லி, உத்​த​ராகண்ட் உள்​ளிட்ட வட மாநிலங்​களில் கடந்த சில மாதங்​களாக பருவ மழை தீவிரமடைந்​துள்​ளது. இதனால் வெள்​ளப்​பெருக்கு ஏற்​பட்​டதுடன் மலைப்​பாங்​கான பகு​தி​களில் நிலச்​சரிவு ஏற்​பட்​டது.

இந்​நிலை​யில் இமாச்சல பிரதேசத்​தின் மண்டி மாவட்​டம் தரம்​பூர் நகரில் நேற்று முன்​தினம் இரவு மேகவெடிப்பு காரண​மாக தொடங்​கிய கனமழை விடிய விடிய கொட்​டித் தீர்த்​தது. இதனால் தரம்​பூர் பேருந்து நிலை​யம் வெள்​ளத்​தில் மூழ்​கியது. சில பேருந்​துகள் வெள்​ளத்​தில் அடித்​துச் செல்​லப்​பட்​டன. பல பேருந்​துகள், கடைகள், நீரேற்று நிலை​யம் உள்​ளிட்​டவை சேதமடைந்​தன.

இது​போல நிஹ்ரி பகு​தி​யில் உள்ள ஒரு குன்​றி​லிருந்து பாறை உருண்டு வந்து ஒரு வீட்​டின் மீது விழுந்​த​தில் 3 பேர் உயி​ரிழந்​தனர். 2 பேர் இடி​பாடு​களில் இருந்து மீட்​கப்​பட்​டனர். இந்த தகவலை மண்டி மாவட்ட காவல் கண்​காணிப்​பாளர் சாக் ஷி வர்மா தெரி​வித்தார். சிம்லா அருகே ஏற்​பட்ட நிலச்​சரி​வில் பல வாக​னங்​கள் புதைந்​தன. இதனால் அப்​பகு​தி​யில் போக்​கு​வரத்து துண்டிக்கப்பட்​டுள்​ளது.

உத்​த​ராகண்​டின் டேராடூன் நகரிலும் நேற்று முன்​தினம் இரவு கனமழை கொட்​டியது. இதனால் ஏற்​பட்ட வெள்​ளப்​பெருக்​கால் ஓட்டல்​கள், கடைகள், வணிக வளாகங்​கள் சேதமடைந்​தன. வெள்​ளம் காரண​மாக சுஹாஸ்த்​ர​தாரா ஆறு கரைபுரண்டு ஓடு​கிறது. இதனால் சுஹாஸ்த்​ர​தாரா சாலை​யில் உள்ள ஓட்​டல்​கள், கடைகள் சேதமடைந்​துள்​ளன.

வெள்​ளத்​தால் பாதிக்​கப்​பட்ட பகு​தி​களை உத்​த​ராகண்ட் முதல்​வர் புஷ்கர் சிங் தாமி பார்​வை​யிட்​டார். பின்​னர் முதல்​வர் தாமி கூறும்​போது, “மாநில பேரிடர் மீட்​புப் படை​யினர் மீட்பு மற்​றும் நிவாரணப் பணி​களில் ஈடு​பட்​டுள்​ளனர். இது தொடர்​பாக உள்​ளூர் நிர்​வாகத்தை அவ்​வப்​போது தொடர்பு கொண்டு நிலை​மையை உன்​னிப்​பாக கண்​காணித்து வரு​கிறேன்” என்​றார்.

இதனிடையே, பிரதமர் நரேந்​திர மோடி​யும் உள் துறை அமைச்​சர் அமித் ஷாவும் உத்​த​ராகண்ட் முதல்​வர் புஷ்கர் சிங் தாமியை தொலைபேசி​யில் தொடர்​பு​கொண்டு நிலை​மையை கேட்​டறிந்​தனர். மேலும் மீட்பு மற்​றும் நிவாரணப் பணி​களுக்கு தேவை​யான உதவி​களை செய்ய மத்​திய அரசு தயா​ராக இருப்​ப​தாக அவர்​கள்​ தாமி​யிடம்​ உறு​தி அளித்​துள்​ளனர்​.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x