Published : 17 Sep 2025 07:19 AM
Last Updated : 17 Sep 2025 07:19 AM

ஐஆர்சிடிசி-ல் ஆதாரை பதிவு செய்தவர்கள் மட்டுமே முதல் 15 நிமிடம் ரயில் டிக்கெட் முன்பதிவு செய்யலாம்: அக். 1 முதல் புதிய நடைமுறை

புதுடெல்லி: ஐஆர்​சிடிசி தளத்​தில் ஆதார் எண்ணை பதிவு செய்த பயணி​கள் மட்​டுமே முதல் 15 நிமிடங்​கள் ரயில் டிக்​கெட்டை முன்​ப​திவு செய்ய முடி​யும். தின​மும் அதி​காலை 12.20 மணி முதல் இரவு 11.45 மணி வரை ரயில் டிக்​கெட்​டு​களை ஆன்​லைனில் முன்​ப​திவு செய்​ய​லாம். தட்​கல் டிக்​கெட்​டு​களை பொறுத்​தவரை ஏசி பெட்​டிகளுக்கு காலை 10 மணிக்​கும், ஏசி அல்​லாத பெட்​டிகளுக்கு காலை 11 மணிக்​கும் ரயில் டிக்​கெட் முன்​ப​திவு தொடங்​கு​கிறது.

கடந்த ஜூலை​யில் தட்​கல் ரயில் டிக்​கெட் முன்​ப​திவுக்கு ஆதார் எண் கட்​டாய​மாக்​கப்​பட்​டது. இதன்​மூலம் தட்​கல் ரயில் டிக்கெட்டில் முறை​கேடு​கள் தடுக்​கப்​பட்டு உள்​ளன. தற்​போது 60 நாட்​களுக்கு முன்​பாக சாதாரண ரயில் டிக்​கெட்டை முன்​ப​திவு செய்​யும் நடை​முறை அமலில் உள்​ளது.

ஆனால் பெரும்​பாலான விரைவு ரயில்​களுக்​கான டிக்​கெட்​டு​கள் சில நிமிடங்​களி​லேயே விற்​றுத் தீர்ந்து விடு​கின்​றன. இதற்கு பல்​வேறு காரணங்​கள் கூறப்​படு​கின்​றன. குறிப்​பாக போலி ஐஆர்​சிடிசி கணக்​கு​கள், சிறப்பு மென்​பொருள் மூலம் விரைவு ரயில்​களில் முறை​கே​டாக டிக்​கெட்​டு​கள் முன்​ப​திவு செய்​யப்​படு​வ​தாக குற்​றம் சாட்டி வரு​கின்​றனர்.

இதுகுறித்து ரயில்வே அமைச்​சகம் வெளி​யிட்ட அறிக்​கை​யில் கூறி​யிருப்​ப​தாவது: ரயில் டிக்​கெட் முன்​ப​தி​வில் முறை​கேடு​களை தடுக்க அக்​டோபர் 1 முதல் புதிய நடை​முறை அமல் செய்​யப்பட உள்​ளது. இதன்​படி ஐஆர்​சிடிசி இணை​யதளம், செயலி​யில் ஆதார் எண் சரி​சார்ப்பு மூலம் டிக்​கெட் வழங்​கும் நடை​முறை அமலுக்கு வரு​கிறது.

ஆதார் எண்ணை பதிவு செய்த பயணி​கள் மட்​டுமே முதல் 15 நிமிடங்​கள் ரயில் டிக்​கெட்டை முன்​ப​திவு செய்ய முடி​யும். இதர பயணி​கள் 15 நிமிடங்​களுக்கு பிறகு டிக்​கெட் முன்​ப​திவு செய்ய அனு​ம​திக்​கப்​படு​வர். இவ்​வாறு ரயில்வே அமைச்சக அறிக்​கை​யில் தெரிவிக்​கப்​பட்டு உள்​ளது.

ரயில்வே வட்​டாரங்​கள் கூறிய​தாவது: பொது​மக்​கள் ஆதாரை பதிவு செய்ய ஐஆர்​சிடிசி இணை​யம், செயலியில் எனது கணக்கு (My account) தளத்​தில் சரி​பார்ப்பு (Authenticate user) பகு​தியை கிளிக் செய்ய வேண்​டும். இதன்​பிறகு ஆதார் எண்ணை பதிவு செய்ய வேண்​டும். உங்​களது செல்​போன் எண்​ணுக்கு பாஸ்​வேர்டு வரும். அந்த பாஸ்​வேர்டை உள்​ளீடு செய்ய வேண்​டும்.

ரயில் டிக்​கெட் முன்​ப​திவு மையங்​களுக்கு நேரில் செல்​பவர்​கள் ஆதார் எண்ணை அளிக்க வேண்​டும். அவர்​களின் மொபைல் போனுக்கு பாஸ்​வேர்டு வரும். அதை உள்​ளீடு செய்து ரயில் டிக்​கெட்டை பெறலாம். புதிய நடை​முறை​யில் எழும் குறை​பாடு​கள்​ பின்​னர்​ களை​யப்​படும்​. இவ்​வாறு ரயில்​வே வட்​டாரங்​கள்​ தெரிவித்​தன.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x