Last Updated : 17 Sep, 2025 07:03 AM

 

Published : 17 Sep 2025 07:03 AM
Last Updated : 17 Sep 2025 07:03 AM

வக்பு வழக்கில் முழுமையற்ற தீர்ப்பு: அகில இந்திய முஸ்லிம் சட்ட வாரியம் அதிருப்தி

புதுடெல்லி: முஸ்​லிம்​களின் முக்​கிய அமைப்​பான இந்​திய முஸ்​லிம் தனி​நபர் சட்ட வாரி​ய (ஏஐஎம்​பிஎல்​பி) தேசிய செய்​தித் தொடர்பாளர் எஸ்​.க்​யு.ஆர்​.இலி​யாஸ் கூறிய​தாவது: வக்பு திருத்​தச் சட்​டம், 2025-ஐ முழு​மை​யாக ரத்து செய்​யக் கோரு​கிறோம். திருத்​தப்​பட்ட சட்​டத்​தின் சில விதி​களை உச்ச நீதி​மன்​றம் நிறுத்தி வைத்​துள்​ளது, ஆனால் இந்த முடிவு முஸ்​லிம்​களின் எதிர்​பார்ப்​பு​களை பூர்த்தி செய்​ய​வில்​லை.

முஸ்​லிம் சமூகம், முஸ்​லிம் தனி​நபர் சட்ட வாரி​யம் மற்​றும் அரசி​யலமைப்​பின் அடிப்​படை விதி​களுக்கு முரணான அனைத்து பிரிவு​களுக்​கும் நீதி​மன்​றம் தடை விதிக்​கும் என எதிர்​பார்த்​தோம். பகுதி நிவாரணம் வழங்​கி​யிருந்​தா​லும், இந்த தீர்ப்பு முழு​மையற்ற மற்​றும் திருப்தி அளிக்​காத​தாக உள்​ளது. அரசி​யலமைப்​புக்கு முரணான அனைத்து பிரிவு​களுக்​கும் முழு​மை​யான தடை விதிக்​கப்​படும் என்று முஸ்​லிம் சமூகம் நம்​பியது நடை​பெற​வில்​லை.

வக்பு அங்​கீ​காரத்தை ரத்து செய்​வது, வக்பு பத்​திரத்​தின் கட்​டா​யத் தேவை உள்​ளிட்ட மீத​முள்ள விதி​கள் இஸ்​லாமிய சட்டங்களுக்கு முரணானவை. இந்​தியா முழு​வதும் உள்ள வக்பு நிறு​வனங்​களின் நேர்​மையை அச்​சுறுத்​து​வ​தாக உள்​ளது. எனவே வக்பு திருத்த சட்​டம், 2025-ஐ முழு​மை​யாக திரும்​பப் பெற வேண்​டும். இவ்​வாறு அவர் தெரி​வித்​தார்.

இதனிடையே, செப்​டம்​பர் 1 முதல் இரண்​டாம் கட்​ட​மாக நடை​பெறும் வக்பு பாது​காப்பு பிரச்​சா​ரம் தொடரும் எனவும் ஏஐஎம்​பிஎல்பி அறி​வித்​துள்​ளது. இதில் போராட்​டங்​கள், பேரணி​கள், பத்​திரி​கை​யாளர் சந்​திப்​பு​கள் மற்​றும் மதங்​களுக்கு இடையே​யான கூட்​டங்​களும்​ நடை​பெற உள்​ள​தாக குறிப்​பிட்​டுள்​ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x