Published : 16 Sep 2025 08:33 AM
Last Updated : 16 Sep 2025 08:33 AM
குவாஹாட்டி: அசாம் மாநிலம் சில்சாரில் உள்ள என்ஐடி-யில் இந்திய கலாச்சார உறவுகள் கவுன்சில் (ஐசிசிஆர்) உதவித்தொகையின் கீழ் வங்கதேச மாணவர்கள் படித்து வருகின்றனர். இந்நிலையில் கடந்த 8-ம் தேதி, இங்கு 3-ம் ஆண்டு படிக்கும் வங்கதேச மாணவர்கள், தங்கள் நாட்டை சேர்ந்த இறுதி ஆண்டு மாணவர்கள் மீது தாக்குதல் நடத்தினர்.
இவர்களில் படுகாயம் அடைந்த இருவர் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த வன்முறை தொடர்பாக வங்கதேச மாணவர்கள் 5 பேரை என்ஐடி அதிகாரிகள் ஓராண்டுக்கு சஸ்பெண்ட் செய்துள்ளனர். இந்த மாணவர்களை கடந்த வாரம் விடுதியில் இருந்து வெளியேற்றியுள்ளனர். மேலும் இவர்களை வங்கதேசத்துக்கு திருப்பி அனுப்ப அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT