Published : 16 Sep 2025 08:29 AM
Last Updated : 16 Sep 2025 08:29 AM

16-வது முப்படை தளபதிகள் மாநாடு கொல்கத்தாவில் தொடங்கினார் பிரதமர் 

கொல்கத்தா: மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் விஜய் துர்க் பகுதியில் உள்ள இந்திய ராணுவத்தின் கிழக்கு பிராந்திய தலைமையக வளாகத்தில் 16-வது முப்படை தளபதிகள் மாநாட்டை (சிசிசி) பிரதமர் நரேந்திர மோடி நேற்று தொடங்கி வைத்தார்.

3 நாட்களுக்கு நடைபெறும் இம்மாநாட்டில் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், முப்படை தலைமை தளபதி அனில் சவுகான், பாதுகாப்புத் துறை செயலாளர் ராஜேஷ் குமார் சிங் மற்றும் முப்படை தளபதிகள் பங்கேற்கின்றனர்.

2 ஆண்டுக்கு ஒரு முறை நடைபெறும் இந்த மாநாட்டில் உயர் அதிகாரிகளும் ராணுவ உயர் அதிகாரிகளும் ஒன்றிணைந்து, போர்த்திறம் குறித்த கருத்துகளை பரிமாறிக் கொள்கின்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x