Published : 16 Sep 2025 07:32 AM
Last Updated : 16 Sep 2025 07:32 AM

மாதம் ரூ.200 கோடி சம்பாதிக்கும் திறன் உள்ளது: சொந்த ஆதாயத்துக்காக எத்தனால் கொள்கை என்ற புகாருக்கு கட்கரி மறுப்பு

நாக்பூர்: மத்​திய அரசு எத்​த​னால் கலந்த பெட்​ரோலை (E20) விற்​பனை செய்​வதற்கு அதிக முக்​கி​யத்​து​வம் அளித்து வரு​கிறது. இதனால், கச்சா எண்​ணெய் இறக்​குமதி குறை​யும் என்​பதுடன் கார்​பன் வெளி​யேற்​றத்தை குறைக்​க​வும் இந்த நடவடிக்​கையை மேற்​கொண்​ட​தாக மத்​திய அரசு தெரி​வித்​துள்​ளது. மேலும், கரும்பு மற்​றும் மக்​காச்​சோளத்தை பயி​ரிடும் விவ​சா​யிகளுக்கு எத்​த​னால் கலப்பு மூலம் அதிக வரு​வாய் கிடைக்​கும் என்​றும் தெரிவிக்​கப்​பட்​டுள்​ளது.

எனினும், எத்​த​னால் கலப்​பால் மைலேஜ் மற்​றும் வாக​னங்​கள் பாதிக்​கப்​படு​வ​தாக பல்​வேறு விமர்​சனங்​களை மோட்​டார் வாகன துறை நிபுணர்​கள் முன்​வைக்​கின்​றனர். குறிப்​பாக, நிதின் கட்​கரி​யின் மகன்​கள் நடத்தி வரும் இரண்டு முன்​னணி எத்​த​னால் நிறுவனங்​கள் பயன்​பெறவே இந்த திட்​டத்தை நடை​முறைப்​படுத்​தி​யுள்​ள​தாக நிதின் கட்​கரி மீது குற்​றச்​சாட்​டு​கள் சுமத்தப்பட்டுள்​ளன.

இந்த நிலை​யில் சர்ச்​சையை பற்றி குறிப்​பி​டா​மல் நாக்​பூரில் நடந்த ஒரு விழா​வில் நிதின் கட்​கரி பேசி​ய​தாவது:
எனது மகன்​களுக்கு யோசனை கூறு​வேன். ஆனால், நான் மோசடி​யில் ஈடு​பட்​ட​தில்​லை. சமீபத்​தில் எனது மகன் 800 கன்​டெய்னர்களில் ஆப்​பிளை ஈரானில் இருந்து இறக்​குமதி செய்​தார்.

அதேபோன்று 1,000 கன்​டெய்​னர்​களில் வாழைப்​பழங்​களை இந்​தி​யா​விலிருந்து ஈரானுக்கு ஏற்​றுமதி செய்​தார். ஈரானுடன் எந்த பண பரிவர்த்​தனை​யும் இல்​லை. என் மகன் இறக்​குமதி மற்​றும் ஏற்​றும​தி​யில் ஈடு​பட்​டுள்​ளான். எனக்கு ஒரு சர்க்​கரை ஆலை, மதுபான தொழிற்​சாலை, மின் உற்​பத்தி நிறுவனம் சொந்​த​மாக உள்​ளன. தனிப்​பட்ட லாபத்​துக்​காக விவ​சா​யத்​தில் சோதனை முயற்​சிகளை மேற்​கொள்​ள​வில்​லை.

எனக்கு போது​மான வரு​மானம் கிடைத்து வரு​கிறது. மாதத்​துக்கு ரூ.200 கோடி சம்​பா​திக்​கும் அளவுக்கு எனக்கு மூளைத் திறன் உள்​ளது. என்​னைப் பொறுத்​தவரை பணப்​பற்​றாக்​குறை என்​பது எனக்கு கிடை​யாது. எனது வணிக பரிந்​துரைகள் அனைத்​தும் வளர்ச்​சிக்​கானவை. லாபத்​துக்​கானது அல்ல.

பெட்​ரோலுடன் எத்​த​னால் கலப்பு திட்​டத்​தில் மத்​திய அரசுக்கு எதி​ராக சமூக ஊடகம் மூலம் மேற்​கொள்​ளப்​படும் பிரச்​சா​ரம் அரசியல் உள்​நோக்​கம் கொண்​டது. பணம் கொடுத்து அது​போன்ற பிரச்​சா​ரங்​கள் பரப்​பப்​படு​கின்​றன. இந்த திட்​டம் விவசாயிகளின் வரு​மானத்தை அதி​கரிக்​க​வும், நாட்​டில் மாசு​பாட்டை குறைப்​ப​தி​லும் உண்​மை​யில் வெற்றி பெற்​றுள்​ளது. இவ்வாறு அமைச்சர் நிதின் கட்​கரி பேசி​னார்​.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x