Published : 14 Sep 2025 07:16 AM
Last Updated : 14 Sep 2025 07:16 AM

மிசோரமில் முதல் ரயில் சேவையை தொடங்கினார் பிரதமர்: ரூ.9 ஆயிரம் கோடி திட்டங்களுக்கு அடிக்கல்

அய்சால்: மிசோரமில் முதல் ரயில் சேவையை பிரதமர் நரேந்​திர மோடி நேற்று தொடங்கி வைத்​தார். இது தவிர ரூ.9 ஆயிரம் கோடி மதிப்​பிலான திட்​டங்​களுக்கு அவர் அடிக்​கல் நாட்​டி​னார்.

பிரதமர் நரேந்​திர மோடி வடகிழக்கு மாநிலங்​களில் 2 நாள் சுற்​றுப் பயணம் மேற்​கொண்​டுள்​ளார். இதன் ஒரு பகு​தி​யாக மிசோரம் மாநிலம் அய்​சால் நகரில் உள்ள விமான நிலை​யத்​துக்கு நேற்று காலை சென்​றடைந்​தார். அங்​கிருந்து லம்​முவல் கிர​வுண்டு பகு​திக்கு ஹெலி​காப்​டரில் செல்ல திட்​ட​மிட்​டார். ஆனால் கனமழை காரண​மாக அங்கு செல்​ல​வில்​லை.

இதையடுத்​து, பைராபி - சாய்​ராங் இடையி​லான 51.38 கி.மீ. நீள ரயில் பாதையை பிரதமர் மோடி கணொலி மூலம் தொடங்கி வைத்​தார். இந்த பாதை அய்​சால் நகரை​யும் அசாமின் சில்​சர் நகரை​யும் இணைக்​கிறது. அத்​துடன் சாய்​ராங் (மிசோரம்) -ஆனந்த் விஹார் (டெல்​லி) இடையி​லான ராஜ்​தானி எக்​ஸ்​பிரஸ், கொல்​கத்​தா-​சாய்​ராங் இடையி​லான கொல்​கத்தா எக்​ஸ்​பிரஸ் மற்​றும் குவாஹாட்​டி-​சாய்​ராங் இடையி​லான குவாஹாட்டி எக்​ஸ்​பிரஸ் ஆகிய 3 ரயில் சேவை​களை​யும் அவர் காணொலி மூலம் கொடியசைத்து தொடங்கி வைத்​தார். இதன்​மூலம் மிசோரம் மாநிலத்​தில் முதல் முறை​யாக ரயில் சேவை தொடங்​கப்​பட்​டுள்​ளது. மேலும் சாலை கட்​டு​மானம் உட்பட ரூ.9 ஆயிரம் கோடி மதிப்​பிலான பல்​வேறு திட்​டங்​களுக்கு அடிக்​கல் நாட்​டப்​பட்​டது. இதில் முடிவடைந்த சில திட்​டங்​களை பிரதமர் மோடி தொடங்கி வைத்​தார்.

இந்​நிகழ்ச்​சி​யில் பிரதமர் மோடி பேசி​ய​தாவது: நாட்​டின் வளர்ச்​சிப் பயணத்​தில் மிசோரம் மாநிலம் இப்​போது முக்​கிய பங்கு வகிக்​கிறது. இது நாட்​டுக்கு குறிப்​பாக மிசோரம் மக்​களுக்கு வரலாற்று சிறப்பு மிக்க நாள். இன்று முதல் அய்​சால் நகரம் நாட்​டின் ரயில்வே வரைபடத்​தில் இடம்​பெறுகிறது.

இந்த புதிய ரயில் வழித்​தடத்​தின் மூலம் மிசோரம் மாநில விவ​சா​யிகளும் வர்த்​தகர்​களும் நாடு முழு​வதும் தங்​கள் பொருட்​களை சுலப​மாக சந்​தைப்​படுத்த முடி​யும். மேலும் மக்​கள் கல்வி மற்​றும் சுகா​தார வசதிக்​காக பிற ஊர்​களுக்கு எளி​தாக செல்​வதற்​கான வாய்ப்​பு​களை பெறு​வார்​கள். மேலும் சுற்​றுலா, போக்​கு​வரத்து மற்​றும் விருந்​தோம்​பல் துறை​களில் கூடு​தல் வேலை​வாய்ப்​பு​களை உரு​வாக்​கும். இவ்​வாறு அவர் தெரி​வித்​தார்.

172 ஆண்​டு​களுக்கு பிறகு: பிரிட்​டிஷ் ஆட்​சிக் காலத்​தில் இந்​தி​யா​வில் முதல் முறை​யாக ரயில் சேவை தொடங்​கப்​பட்​டது.ஆனால், வடகிழக்கு மாநிலங்​களில் நில அமைப்பு காரண​மாகரயில் சேவை இயக்கப்​படவில்​லை. இந்​நிலை​யில், மத்​தி​யில் பாஜக அரசு அமைந்த பிறகு வடகிழக்கு மாநிலங்​களிலும் ரயில் பாதைகள் படிப்​படி​யாக நிறு​வப்​பட்டு வரு​கின்​றன. அந்த வகை​யில், இந்​தி​யா​வில் ரயில் சேவை தொடங்கி 172 ஆண்​டுக்​குப் பிறகு மிசோரம் மாநிலத்​தில் முதல் முறை​யாக ரயில் சேவை தொடங்​கப்​பட்​டுள்​ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x