Last Updated : 13 Sep, 2025 08:27 AM

3  

Published : 13 Sep 2025 08:27 AM
Last Updated : 13 Sep 2025 08:27 AM

சத்குரு போல வீடியோவில் பேசி பெண்ணிடம் ரூ.3.75 கோடி மோசடி

பெங்களூரு: பெங்​களூரு​வில் உள்ள சி.​வி.​ராமன் நகரை சேர்ந்த 57 வயதான பெண் ஒரு​வர் போலீ​ஸில் புகார் ஒன்றை அளித்​தார். அதில், “கடந்த பிப்​ர​வரி 26-ம் தேதி இன்​ஸ்​டாகி​ராம் பக்​கத்​தில் ஈஷா அறக்​கட்​டளை​யின் தலை​வர் சத்​குரு ஜக்கி வாசுதேவ் பேசுவதை போன்ற வீடியோ ஒன்றை பார்த்​தேன்.

அதில் குறிப்​பிட்ட பங்கு சந்​தை​யில் 250 அமெரிக்க‌ டாலர் (சு​மார் ரூ.22 ஆயிரம்) முதலீடு செய்​தால் அதிக அளவி​லான வட்​டி​யுடன் சேர்த்​து, பணத்தை 100 நாட்​களில் திரும்ப பெறலாம் என கூறப்​பட்​டிருந்​தது.

வாலித் என்​பவர் தொடர்​பு​கொண்டு அவரது நிறு​வனத்​தின் வாட்​ஸ்​அப் குழு​வில் சேர்த்​தார். பின்​னர் ஜூம் வீடியோ மூல​மாக பங்கு சந்தை பயிற்சி வழங்​கினர். அதன் அடிப்​படை​யில் 2 தவணை​யாக ரூ. 3 கோடியே 75 லட்​சத்து 72 ஆயிரத்து 121-ஐ அந்த நிறு​வனத்​தின் வங்கி கணக்​கில் முதலீடு செய்​தேன். ஆனால் 100 நாட்​களுக்கு பின்​னர் எனது பணமும், லாப​மும் திரும்ப தரவில்​லை” என கூறியிருந்​தார்.

இதுகுறித்து பெங்​களூரு கிழக்கு மண்டல குற்​றப்​பிரிவு போலீ​ஸார் வழக்​குப்​ப​திவு செய்து விசா​ரித்து வரு​கின்​றனர். முதற்​கட்ட விசா​ரணை​யில், சத்​குரு ஜக்கி வாசுதேவ் பேசுவதை போன்று ஏஐ டீப் ஃபேக் (AI Deep fake ) வீடியோ உரு​வாக்​கி, மோசடி செய்​தது தெரிய​வந்​தது. இதே போல நிறைய பேரை அந்த கும்​பல் ஏமாற்​றியதும் தெரிய​வந்​தது. சம்​பந்​தப்​பட்ட வங்கி கணக்​கு​களை முடக்​கி, பணத்தை திரும்ப பெற முயற்​சித்​து வரு​வ​தாக போலீ​ஸார்​ தெரி​வித்​தனர்​.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x