Published : 13 Sep 2025 07:53 AM
Last Updated : 13 Sep 2025 07:53 AM

தெலங்கானா | டிஜிட்டல் பாஸ்வேர்டு கேட்டு சித்ரவதை: பெண்ணை குக்கரால் அடித்துக்கொன்ற வேலையாட்கள்

ஹைதராபாத்: நகைகளை கொள்​ளை​யடிக்க 2 வேலையாட்​கள் தெலங்​கா​னா​வில் வீட்​டில் தனி​யாக இருந்த பெண்ணை குக்கரால் அடித்து கொலை​யும் செய்​தனர். ஹைத​ரா​பாத் போலீ​ஸார் 5 குழுக்​களை அமைத்து குற்​ற​வாளி​களை தேடும் பணி​யில் மும்​முர​மாக ஈடு​பட்​டுள்​ளனர்.

ஹைத​ரா​பாத் கூகட்​பல்​லி​யில் உள்ள ஒரு கேட்டட் கம்​யூனிட்டி (தொகுப்பு வீடு​கள்) பகு​தியை சேர்ந்​தவர் ராகேஷ். இவரது மனைவி ரேணு அகர்​வால். பல ஆண்​டு​களாக ஹைத​ரா​பாத்​தில் இவர்​கள் உருக்கு வணி​கம் செய்து வரு​கின்​றனர். இவர்​களுக்கு திரு​மண​மான ஒரு மகளும், கல்​லூரி​யில் படிக்​கும் ஒரு மகனும் உள்​ளனர்.

இவர்​களது வீட்​டில் ஜார்க்​கண்ட் மாநிலத்தை சேர்ந்த ரோஷன் எனும் இளைஞர் பல ஆண்​டு​களாக பணி​யாற்றி வந்​தார். இந்​நிலை​யில், கடந்த 11 நாட்​களுக்கு முன்​னர், தனக்கு உதவி​யாக அதே மாநிலத்​தைச் சேர்ந்த வர்ஷா எனும் நண்​பரை​யும் பணிக்கு சேர்த்​தார் ரோஷன். இந்​நிலை​யில், கடந்த புதன்​கிழமை ராகேஷ் கடைக்கு சென்று விட்​டார். மகனும் கல்​லூரிக்கு சென்று விட்​டார். வீட்​டில் ரேணு அகர்​வால் மட்​டும் தனி​யாக இருந்​தார்.

அப்​போது மாலை 5 மணி​யள​வில், பணி​யாட்​களான ரோஷன் மற்​றும் வர்ஷா ஆகிய இரு​வரும், தனி​யாக இருந்த ரேணு அகர்​வாலை கட்டி போட்​டு, சரமாரி​யாக அடித்து உதைத்​துள்​ளனர். வீட்​டில் நகைகள், ரொக்​கப்​பணம் போன்​றவற்றை எங்​கெங்கு வைத்​துள்​ளீர்​கள் என்று கேட்டு கத்​தி​யால் ரேணு அகர்​வாலின் கை நரம்​பு​கள், கால் நரம்​பு​களை வெட்டி சித்​ர​வதை செய்​துள்​ளனர்.

நகைகள், பணம் எல்​லாம் வங்கி லாக்​கரில் தான் வைத்​துள்​ளோம் என்று கூறி​யுள்ளார். அப்போது லாக்கரின் டிஜிட்டல் பாஸ்வேர்டு கேட்டு அவர்​கள் சித்ரவதை செய்துள்ளனர். கடைசி​யில், குக்​கரை எடுத்து ரேணு அகர்​வாலின் தலை​யில் சரமாரி​யாக தாக்கி உள்​ளனர். அதன்​பிறகு, கத்​தி​யால் கழுத்தை அறுத்து படு​கொலை செய்​துள்​ளனர்.

அதன் பின்​னர், ரேணு அகர்​வால் அணிந்​திருந்த தங்க செயின், கம்​மல், வளை​யல், மோதிரம் போன்ற சுமார் 5 சவரன் நகைகளை கொள்ளை அடித்​ததோடு, பீரோ​வில் வைத்​திருந்த ரூ.1 லட்​சத்​தை​யும் கொள்ளை அடித்​தனர்.

இதனை தொடர்ந்​து, ரத்த கறை படிந்த தங்​களின் உடமை​களை அங்​கேயே போட்​டு​விட்​டு, இரு​வரும் குளியல் அறை​யில் ரத்த கறை நீங்க குளித்து விட்​டு, மாற்று உடை அணிந்து கொண்​டு, தங்​களின் உடமை​களை எடுத்​துக்​கொண்டு ரேணு அகர்​வாலின் இருசக்கர வாக​னத்​திலேயே அங்​கிருந்து தப்பி தலைமறை​வாகி உள்​ளனர்.

மாலை 7 மணி​யள​வில் ரேணு அகர்​வாலின் கணவர் ராகேஷ் கடை​யில் இருந்து வீட்​டுக்கு வந்து கதவை தட்டி உள்​ளார். கதவுவெகு நேர​மாக திறக்​கப்பட வில்​லை. இதனால் அங்​குள்ள ஒரு பிளம்​பரை அழைத்​து, வீட்​டின் பின்​புற ஜன்​னலை உடைத்​து, வீட்​டுக்குள் சென்று கதவை திறக்க சொன்​னார்.

அதன்​படி செய்த பிளம்​பர், வீட்​டில் ரேணு அகர்​வால் ரத்த வெள்​ளத்​தில் கிடப்​ப​தாக கூறி​னார். உடனே கூகட்​பல்லி போலீ​ஸாருக்கு தகவல் கொடுக்​கப்​பட்​டது. அதன்​பேரில் போலீ​ஸார் சம்பவ இடத்​துக்கு சென்று விசா​ரணை மேற்​கொண்​டனர்.

கண்​காணிப்பு கேம​ராக்​களை​ ஆய்வு செய்து பார்த்​த​தில் பணி​யாளர்​கள் இரு​வர்​தான் இந்த கொலையை செய்​தது என போலீஸார் தீர்​மானித்​தனர். இவர்​களை பிடிக்க 5 குழுக்​கள் அமைக்​கப்​பட்​டுள்​ள​தாக போலீஸ்​ அதி​காரி​கள்​ தெரி​வித்​துள்​ளனர்​.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x