Published : 12 Sep 2025 08:52 AM
Last Updated : 12 Sep 2025 08:52 AM

தெலங்கானாவில் தொடர் கனமழை மின்னல் தாக்கி 8 பேர் உயிரிழப்பு

ஹைதராபாத்: தெலங்கானாவில் கன மழையால் ஒரே நாளில் மின்னல் தாக்கி 8 பேர் உயிரிழந்தனர். தெலங்​கானா மாநிலத்​தில் கடந்த 2 நாட்​களாக பரவலாக மழை பெய்து வரு​கிறது. ஹைத​ரா​பாத் போன்ற நகரங்​களில் தொடர் மழை​யால் மக்​களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்​கப்​பட்​டுள்​ளது.

சாலைகளில் மழை நீர் ஆங்​காங்கே தேங்​கிய​தில் முக்​கிய சாலைகள் உட்பட பல இடங்​களில் வெள்​ளம் போல் காட்​சி​யளிக்​கிறது. இதனால் வாகன ஓட்​டிகள் மிக​வும் அவதிக்​குள்​ளாகி உள்​ளனர். விஜய​வாடா - ஹைத​ரா​பாத் தேசிய நெடுஞ்​சாலை​யில் மழை காரண​மாக போக்​கு​வரத்து ஸ்தம்​பித்​தது.

தெலங்​கா​னா​வில் பெய்து வரும் கன மழை மற்​றும் மின்​னல் தாக்​கிய​தில் 8 பேர் பரி​தாப​மாக உயி​ரிழந்​துள்​ளனர். கத்​வால் மாவட்​டம், பூம்​பூர் கிராமத்​தில் புதன் கிழமை மாலை தொடர் மழை காரண​மாக வயலில் கூலி வேலை பார்த்து வந்த 7 தொழிலா​ளர்​கள் பனை மரத்​தின் கீழ் ஒதுங்​கினர்.

அப்​போது மின்​னல் தாக்​கிய​தில் சர்​வேஷ், பார்​வதி மற்​றும் சவு​பாக்​கியா ஆகிய 3 பேர் பரி​தாப​மாக உயி​ரிழந்​தனர். மற்ற 4 பேர் காயங்​களு​டன் உயிர் தப்​பினர்.

இதே​போன்று நிர்​மல் மாவட்​டத்​தில் வெங்​கட், எல்​லைய்யா மற்​றும் இவரது மனைவி எல்​லம்மா ஆகிய மூவரும், மின்​னல் தாக்கி இறந்​தனர். கம்​மம் மாவட்​டம், சத்​ய​நா​ராயணபுரம் கிராமத்​தில் மகேஷ் மற்​றும் வீரபத்​ரய்யா எனும் விவ​சா​யிகள் இரு​வரும் மின்​னல் தாக்கி உயி​ரிழந்​துள்​ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x