Published : 12 Sep 2025 08:24 AM
Last Updated : 12 Sep 2025 08:24 AM

கேரளாவில் அமீபா தொற்று: உயிரிழப்பு 6 ஆக உயர்வு

கோழிக்கோடு: கேரளா​வில் கடந்த சில மாதங்​களாக மூளையை உண்​ணும் அமீபா தொற்று பரவி வரு​கிறது. இத்​தொற்று மாசுபட்ட தண்​ணீரில் உள்ள அமீபா மூலம் பரவு​கிறது. இத்​தொற்​றுக்கு மலப்​புரம் மாவட்​டத்தின் வந்​தூரை சேர்ந்த 54 வயது பெண் திங்கட்கிழமை உயி​ரிழந்​தார்.

இந்​நிலை​யில் கோழிக்​கோடு மருத்​து​வக் கல்​லூரி மருத்​து​வ​மனை​யில் சிகிச்சை பெற்று வந்த ஷாஜி (47) என்​பவர் நேற்று உயிரிழந்தார். இதன் மூலம் இந்​நோய்க்கு உயி​ரிழந்​தோர் எண்​ணிக்கை 6 ஆக உயர்ந்​துள்​ளது.

மலப்​புரம் மாவட்​டம் செம்​பி​ராவை சேர்ந்த ஷாஜி கடந்த ஆகஸ்ட் 9-ம் தேதி இம்​மருத்​து​வ​மனை​யில் அனு​ம​திக்​கப்​பட்​டார். அவருக்கு இத்​தொற்று எப்​படி ஏற்​பட்​டது என்​பதை அதி​காரி​கள் இன்​னும் உறு​திப்​படுத்​த​வில்​லை. கோழிக்​கோடு மருத்​து​வக் கல்​லூரி​யில் இத்​தொற்​றுக்கு தற்​போது 10 பேர் சிகிச்சை பெற்று வரு​கின்​றனர்.

கேரளா​வில் கடந்த ஜூலை மாதத்​திலிருந்து மூளைக் காய்ச்​சல் பதி​வானதை தொடர்ந்து வடக்கு மாவட்​டங்​களில் உள்ள கிணறுகள் மற்​றும் குளங்​களில் குளோரின் கலப்​பது உள்​ளிட்ட துப்​புர​வுப் பணி​களை சுகா​தார அதி​காரி​கள் தொடங்​கினர்​.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x