Last Updated : 12 Sep, 2025 08:14 AM

 

Published : 12 Sep 2025 08:14 AM
Last Updated : 12 Sep 2025 08:14 AM

ராஜஸ்தானில் மதமாற்றம்: சென்னையில் பயிற்சி அளித்தது அம்பலம்

புதுடெல்லி: ​ராஜஸ்​தான் மாநிலம் ஆல்​வாரில் கிறிஸ்தவ மிஷனரி​கள் நடத்​தும் விடு​தி​யில் மதம் மாற்​றம் செய்​வ​தாக புகார் எழுந்துள்​ளது. இதில் விடு​தி​யைச் சுற்​றி​யுள்ள பகு​தி​களில் வசிக்​கும் பட்​டியல் சாதி​யினர் மற்​றும் பழங்​குடி​யினர் உட்பட பல்​வேறு வகுப்​பினர் என சுமார் 60 குழந்​தைகள் மற்​றும் அவர்​களது பெற்​றோர் மதம் மாறு​வதற்கு தூண்​டப்​பட்டு ஏமாற்​றப்​பட்​ட​தாக போலீஸ் விசா​ரணை​யில் தெரிய வந்​துள்​ளது.

ஆல்​வாரின் அரசு பள்​ளி​யில் படிக்​கும் குழந்​தைகள் மிஷினரி​யின் விடு​தி​யில் தங்க வைக்​கப்​பட்​டுள்​ளனர். பள்​ளிக்கு தின​மும் அனுப்​பாத​தால், அக்​குழந்​தைகள் விடு​தி​யிலேயே அதிக நாட்​கள் தங்கி உள்​ளனர். அவர்​களுக்​கான உணவு உட்பட அனைத்து செல​வு​களை​யும் கிறிஸ்தவ மிஷனரி​கள் செய்​துள்​ளனர். பின்​னர் குழந்​தைகளை​யும் அவர்​களின் பெற்​றோரை​யும் மதம் மாற்ற முயற்​சித்​துள்​ள​தாக போலீஸ் விசா​ரணை​யில் தெரிய வந்​துள்​ளது.

இதுகுறித்து ஆல்​வார் காவல் கண்​காணிப்​பாளர் சுதிர் சவுத்ரி கூறுகை​யில், ‘‘மதம் மாற்​றம் செய்​வது கடந்த 15 ஆண்​டு​களாக விடுதியில் நடந்து வரு​கிறது. மதம் மாற்​று​வதற்​கான சிறப்பு பயிற்​சியை சென்​னை​யில் உள்ள ஒரு நிறு​வனம் அளித்து வந்​துள்​ளது. சோஹன் சிங் மற்​றும் அம்​ரித் சிங் ஆகிய 2 போதகர்​கள், விடு​தி​யில் தங்க வைக்​கப்​படும் குழந்​தைகளிடம் பைபிளைப் படிக்​கக் கட்டாயப்​படுத்தி உள்​ளனர்.

இதற்கு எதிர்ப்பு தெரி​வித்து போலீஸ் நிலை​யத்​தில் புகாரும் அளிக்​கப்​பட்​டுள்​ளது. இது தொடர்​பாக சோஹன் சிங், அம்​ரித் சிங்கை போலீ​ஸார் கைது செய்​துள்​ளனர்’’ என்​றார். ராஜஸ்​தான் மாநிலத்​தில் கட்​டாய மதம் மாற்ற தடை மசோதா கடந்த செவ்​வாய்க்​கிழமை சட்​டப்​பேர​வை​யில் நிறைவேற்​றப்​பட்​டது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x