Last Updated : 12 Sep, 2025 08:09 AM

 

Published : 12 Sep 2025 08:09 AM
Last Updated : 12 Sep 2025 08:09 AM

கர்​நாடக மாநிலம் கொல்லூர் மூகாம்பிகை கோயிலுக்கு ரூ.4.5 கோடியில் தங்க, வைர ஆபரணங்கள் வழங்கிய இளையராஜா

இசையமைப்பாளர் இளையராஜா கொல்லூர் மூகாம்பிகை கோயிலுக்கு வைர கிரீடம், தங்க வாள் உள்ளிட்ட நகைகளை காணிக்கையாக வழங்கினார். அவருக்கு கோயில் நிர்வாகிகள் மாலை அணி​வித்து மரி​யாதை செய்தனர்.

பெங்களூரு: கர்​நாடக மாநிலம் உடுப்பி மாவட்​டம் பைந்​தூர் அரு​கே​யுள்ள கொல்​லூர் மூகாம்​பிகை அம்​மன் கோயில் மிக​வும் பிரசித்தி பெற்​றது. இக்​கோயி​லின் மூல​வ​ராக  மூகாம்​பிகை அம்​மன் சரஸ்​வ​தி, லட்​சுமி, பார்​வதி ஆகிய 3 தெய்​வங்​களின் அம்​ச​மாக கருதப்​படு​கிறார். கொல்​லூர் மூகாம்​பிகையை வணங்​கிய​தால் தனது வாழ்​வில் அதிச​யங்​கள் நிகழ்ந்​த​தாக இசையமைப்​பாளர் இளை​ய​ராஜா பல முறை தெரி​வித்​துள்​ளார்.

அவர் அடிக்​கடி அங்கு சென்று மூகாம்​பிகையை வழிபட்​டுள்​ளார். இந்​நிலை​யில் இசையமைப்​பாள​ரும் மாநிலங்​களவை உறுப்​பினரு​மான இளை​ய​ராஜா நேற்​று​முன் தினம் தனது மகன் கார்த்​திக் ராஜா, அவரது பேரன் யத்​தீஸ்​வர் ஆகியோ​ருடன் கொல்​லூர் மூகாம்​பிகை கோயி லுக்கு வந்​தார். அப்​போது அம்​மனுக்கு 2 வைர கிரீடங்​கள், வைர நெக்​லஸ், வீரபத்ர தேவர் சுவாமிக்கு தங்க வாள், வெள்ளி கிரீடம் ஆகிய​வற்றை காணிக்​கை​யாக வழங்​கி​னார்.

இந்த ஆபரணங்​களை பெற்​றுக் கொண்ட கோயில் நிர்​வாகி​கள், அவற்றை கோயிலை சுற்றி ஊர்​வல​மாக மேள தாளம் முழங்க எடுத்து சென்​றனர். பின்​னர், கொல்​லூர் மூகாம்​பிகை அம்​மனுக்கு வைர கிரீடத்​தை​யும் வீரபத்​திர சுவாமிக்கு தங்க வாளை​யும் அணி​வித்​து, இளை​ய​ராஜா பெயரில் சிறப்பு பூஜை செய்​தனர்.

இதையடுத்து கோயில் நிர்​வாகி​கள் சார்​பில் இளை​ய​ராஜா, அவரது மகன் கார்த்​திக் ராஜா, அவரது பேரன் யத்​தீஸ்​வர் ஆகியோ​ருக்கு மாலை அணி​வித்து மரி​யாதை செய்தனர். இதுகுறித்​து கோயில் நிர்​வாகி​கள் கூறுகை​யில், “இசை​ஞானி இளை​ய​ராஜா மூகாம்​பிகை​யின் தீவிர பக்​தர். அம்​மனை போற்றி விலை மதிப்​பற்ற பாடல்​களை இயற்​றி​யுள்​ளார். இப்​போது ரூ.4.5 கோடி மதிப்​பில் வைர, தங்க ஆபரணங்​களை அம்​மனுக்கு வழங்​கி​யுள்​ளார்.

திரை​யுல​கில் நுழைந்து 50 ஆண்​டு​கள் ஆனதை தொடர்ந்து இந்த காணிக்​கையை அவர் வழங்​கி​யுள்​ளார். இளை​ய​ராஜாவுக்கு மூகாம்​பிகை அம்​மன் எல்​லா​வித​மான நன்​மை​களை​யும் புரி​வார். கோயில் நிர்​வாகி​கள் சார்​பில் அவருக்​கு நன்​றியை தெரி​வித்​துக்​ கொள்​கிறோம்” என்​றனர்​.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x