Published : 12 Sep 2025 07:44 AM
Last Updated : 12 Sep 2025 07:44 AM

இந்தியா - மொரீஷியஸ் இடையே 10 ஒப்பந்தம்: பிரதமர்கள் மோடி, நவீன் முன்னிலையில் கையெழுத்து

பிரதமர் நரேந்திர மோடியை, மொரீஷியஸ் பிரதமர் நவீன் சந்திர ராம்மூலம் வாராணசியில் நேற்று சந்தித்துப் பேசினார். இதன் பிறகு இரு தலைவர்களும் நிருபர்களுக்கு கூட்டாக பேட்டியளித்தனர். | படம்: பிடிஐ |

வாராணசி: பிரதமர் நரேந்​திர மோடியை, மொரீஷியஸ் பிரதமர் நவீன் சந்​திர ராம்​மூலம் வாராணசி​யில் நேற்று சந்​தித்​துப் பேசினார். அப்​போது இரு நாடு​கள் இடையே 10 ஒப்​பந்​தங்​கள் கையெழுத்​தாகின. மொரீஷியஸ் பிரதமர் நவீன் சந்​திர ராம்​மூலம் 8 நாட்​கள் பயண​மாக இந்​தியா வந்​துள்​ளார். அவர் நேற்று உத்தர பிரதேசத்​தின் வாராணாசிக்கு வந்தார். பிரதமர் நரேந்​திர மோடி டெல்​லி​யில் இருந்து சிறப்பு விமானம் மூலம் நேற்று காலை 10.30 மணிக்கு வாராணசி சென்​றார்.

வாராணசி தாஜ் ஹோட்​டலில் பிரதமர் நரேந்​திர மோடியை மொரீஷியஸ் பிரதமர் நவீன் சந்​திர ராம்​கூலம் சந்​தித்​துப் பேசி​னார். அப்​போது விண்​வெளி, வேளாண்​மை, அறி​வியல்​-தொழில்​நுட்​பம், கடல்​சார் ஆராய்ச்​சி, நீர்​நிலைகள் குறித்த ஆராய்ச்​சி, அரசு ஊழியர்​களுக்​கான திறன்​சார் பயிற்​சி, மின்​சார உற்​பத்​தி, குறு-சிறு தொழிற்​சாலைகள் மேம்​பாடு, மிதக்​கும் சூரிய மின் உற்​பத்தி நிலை​யம் அமைப்​பது உட்பட இரு​நாடு​களிடையே 10 ஒப்​பந்​தங்​கள் கையெழுத்​தாகின.

குறிப்​பாக உயர்க் கல்வி தொடர்​பாக சென்னை ஐஐடி, மொரீஷியஸ் பல்​கலைக்​கழகம் இடையே முக்​கிய ஒப்​பந்​தம் கையெழுத்தானது. பின்னர் பிரதமர் நரேந்​திர மோடி​யும் மொரீஷியஸ் பிரதமர் நவீன் சந்​திர ராம்​கூல​மும் கூட்​டாக நிருபர்​களுக்கு பேட்​டியளித்​தனர்.

அப்​போது பிரதமர் மோடி கூறிய​தாவது: கடந்த 18-ம் நூற்​றாண்​டில் இந்​தி​யா​வில் இருந்து ஆயிரக்​கணக்​கான தொழிலா​ளர்​கள் மொரீஷியஸ் நாட்​டில் குடியேறினர். இன்​றள​வும் அந்த நாட்​டில் இந்​திய கலாச்​சா​ரம் நீடித்து நிலைத்​திருக்​கிறது. இந்​தி​யா​வும் மொரீஷியஸும் நட்பு நாடு​கள் மட்​டுமன்​றி, ஒரு குடும்​பத்தை சேர்ந்​தவை.

ஆராய்ச்​சி, கல்​வி, புதுமை கண்​டு​பிடிப்​பு​களில் இரு நாடு​களும் இணைந்து செயல்​படும். தற்​போது மொரீஷியஸ் தேசத்​தந்தை ஷிவ்​சாகர் ராம்​கூலத்​தின் 125 -வது பிறந்த நாளை கொண்​டாடி வரு​கிறோம். அவரது நினை​வாக இந்​தி​யா​வின் சார்​பில் மொரீஷியஸ் நாட்​டில் 500 படுக்​கைகள் கொண்ட மருத்​து​வ​மனை கட்டிக் கொடுக்​கப்​படும்.

இந்​தி​யா​வின் சார்​பில் மொரீஷியஸுக்கு 100 மின்​சார பஸ்​கள் வழங்​கப்​படும். 17.5 மெகா​வாட் திறன் கொண்ட மிதக்​கும் சூரிய மின் உற்​பத்தி நிலை​யம் அமைத்து கொடுக்​கப்​படும். மொரீஷியஸின் 500 அரசு ஊழியர்​களுக்கு இந்​தி​யா​வில் திறன்​சார் பயிற்சி அளிக்​கப்​படும். இவ்​வாறு மோடி தெரி​வித்​தார்.

மொரீஷியஸ் பிரதமர் நவீன் சந்​திர ராம்​கூலம் பேசும்​போது, “கல்​வி, சுகா​தா​ரம், கட்​டு​மானம், மரபு​சாரா எரிசக்​தி, கடல்​சார் பாது​காப்பு ஆகிய​வற்​றில் இரு நாடு​களும் இணைந்து செயல்​பட்டு வரு​கின்​றன. இந்​தி​யா​வின் உதவி​களால் மொரீஷியஸ் மக்களின் வாழ்க்கைத் தரம்​மேம்பட்​டிருக்​கிறது. இதற்​காக பிரதமர் மோடிக்கு மனதார நன்​றியை தெரிவித்​துக் கொள்​கிறேன்” என்​றார்.

வாகன உற்பத்தி மையம் இந்தியா: இந்திய ஆட்டோமொபைல் உற்பத்தியாளர்கள் சங்கத்தின் (எஸ்ஐஏஎம்) மாநாடு டெல்லியில் நேற்று நடைபெற்றது. இதில் பிரதமர் நரேந்திர மோடியின் உரை வாசிக்கப்பட்டது. அதில், “இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியில் ஆட்டோமொபைல் துறை மிக முக்கிய பங்கு வகிக்கிறது.

சுயசார்பு இந்தியா திட்டத்தில் மத்திய அரசோடு ஆட்டோ மொபைல் நிறுவனங்கள் கைகோக்க வேண்டும். சுயசார்பு திட்டங்களை முன்னெடுத்துச் செல்ல வேண்டும். உலகின் வாகன உற்பத்தி மையமாக இந்தியா உருவெடுப்பது உறுதி. அந்த இலக்கை நோக்கி நாம் வேகமாக முன்னேறி வருகிறோம்”என கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x