Published : 12 Sep 2025 07:39 AM
Last Updated : 12 Sep 2025 07:39 AM

நாளை மணிப்பூர் செல்கிறார் பிரதமர் மோடி

இம்பால்: பிரதமர் மோடி நாளை மணிப்​பூர் செல்ல வாய்ப்​புள்​ள​தால், அங்கு பாது​காப்பு ஏற்​பாடு​கள் பலப்​படுத்​தப்​பட்டு வருகின்றன. பிரதமர் மோடி கடந்த சில நாட்​களாக பஞ்சாப், இமாச்சல பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்​களில் மழை, வெள்​ளம், மற்றும் நிலச்​சரி​வால் பாதிக்​கப்​பட்ட பகுதிகளை பார்​வை​யிட்டு ஆய்வு செய்தார். இந்​நிலை​யில் நேற்று உத்​த​ராகண்ட் சென்று வெள்ள பாதிப்பு பகு​தி​களை பார்​வை​யிட்​டார்.

மணிப்​பூரில் கடந்த 2023-ம் ஆண்டு மே மாதம் குகி மற்​றும் மைத்​தேயி இனத்​தினர் இடையே ஏற்​பட்ட மோதல் பயங்கர கலவர​மாக தொடர்ந்​தது. இதில் 250-க்​கும் மேற்​பட்​டோர் உயி​ரிழந்​தனர். இந்த கலவரத்​துக்​குப்​ பின் பிரதமர் மோடி மணிப்​பூர் செல்​ல​வில்​லை. இந்​நிலை​யில் மிசோரம் மாநிலத்​திலிருந்​து, பிரதமர் மோடி நாளை மணிப்​பூர் செல்ல வாய்ப்​புள்​ள​தாக தகவல்​கள் வெளியாகியுள்ளன.

காங்லா கோட்டை அரு​கில் உள்ள அமைதி மைதானத்​தில் நடை​பெறும் பொதுக்​கூட்​டத்​தில் பிரதமர் மோடி பங்​கேற்​கிறார் என தகவல்​ வெளி​யாகி​யுள்​ளது. இதனால் அங்கு பாது​காப்பு படை​யினர் பணி​யமர்த்​தப்​பட்​டுள்​ளனர். அமைதி மைதானம் செல்​லும் சாலைகளில் மூங்​கில் தடுப்​பு​கள் அமைக்​கப்​படு​கின்​றன.

மணிப்​பூரின் பல பகு​தி​களில் பாது​காப்பு தீவிரப்​படுத்​தப்​பட்​டுள்​ளது. தீவிர​வா​தி​களின் நடமாட்​டத்தை கண்​காணிக்க தற்​காலிக பரிசோதனை மையங்​களை​யும் மத்​திய, மாநில போலீ​ஸார் அமைத்து வரு​கின்​றனர். தடை செய்​யப்​பட்ட தீவிர​வாத இயக்​கங்களைச் சேர்ந்த 3 தீவிர​வா​தி​கள் கடந்த 48 மணி நேரத்​தில் கைது செய்​யப்​பட்​டுள்​ளனர். ஒரு​வரிட​மிருந்து கைத்​துப்​பாக்​கி பறி​முதல்​ செய்​யப்​பட்​டது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x