Published : 12 Sep 2025 06:43 AM
Last Updated : 12 Sep 2025 06:43 AM
ரேபரேலி: ‘‘வாக்கு திருட்டு குறித்து இன்னும் மோசமான ஆதாரத்தை வெளியிடவுள்ளேன்’’ என ரேபரேலி மக்களிடம் ராகுல் காந்தி தெரிவித்தார்.
உத்தர பிரதேசம் ரேபரேலி தொகுதியில் 2 நாள் சுற்றுப் பயணம் மேற்கொண்ட மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி நேற்று அளித்த பேட்டியில் கூறியதாவது:
மகாராஷ்டிரா, ஹரியானா மற்றும் கர்நாடகாவில் நடைபெற்ற தேர்தல்களில் எல்லாம் வாக்குகள் திருடப்பட்டுள்ளன. இதற்கான ஆதாரத்தை நாங்கள் வெளியிட்டுள்ளோம். வரும் நாட்களில் இன்னும் மோசமான ஆதாரத்தை நான் வெளியிடுவேன்.
‘‘வாக்குகளை திருடியவர்கள், அரியணையை விட்டு வெளியேறுங்கள்’’ என்ற கோஷம் நாடு முழுவதும் எதிரொலிக்கிறது. மோசடி மூலம் அரசுகள் உருவாக்கப்படுகின்றன என்பது உண்மை. அதற்கான ஆதாரத்தை நாங்கள் அளிப்போம். அந்த ஹைட்ரஜன் குண்டு வெடிக்கும்போது, அனைத்தும் சுத்தமாகிவிடும். இவ்வாறு ராகுல் காந்தி கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT