Published : 12 Sep 2025 05:54 AM
Last Updated : 12 Sep 2025 05:54 AM

நேபாள கலவரத்தில் சிக்கித் தவித்த ஆந்திர சுற்றுலா பயணிகள் 144 பேர் தாயகம் திரும்பினர்

திருப்​பதி: நேபாளத்​தில் உள்​நாட்டு கலவரத்​தில் சிக்கித் தவித்த ஆந்​தி​ராவை சேர்ந்த 144 சுற்​றுலா பயணி​கள், பத்​திர​மாக விமானம் மூலம் ஆந்​திரா திரும்​பினர். அவர்​களை உறவினர்​கள், நண்​பர்​கள் விமான நிலை​யத்​தில் உற்​சாக​மாக வரவேற்​றனர்.

நேபாளத்​தில் உள்​நாட்டு கலவரத்​தில் சிக்கித் தவித்த ஆந்​திர சுற்​றுலாப் பயணி​கள், தங்​களை காப்​பாற்​றும்​படி வாட்ஸ் அப் வீடியோ பதிவு மூலம் ஆந்​திர மாநில கல்வி துறை அமைச்​சர் லோகேஷிடம் முறை​யிட்​டனர். இதனை தொடர்ந்​து, அவர், அமராவதி தலைமை செயல​கத்​திலேயே முகாமிட்​டு, இதற்​கென தனி அதி​காரி​களின் குழுவை உரு​வாக்​கி, தகவல்​களை சேகரித்​தார்.

மேலும், மத்​திய வெளி​யுறவுத்​துறை அமைச்​சகம், உட்பட சில மத்​திய அமைச்​சர்​களின் உதவியை நாடி​னார். சுமார் 240 பேரை மீட்க தலைமை செயல​கத்​திலேயே தங்கி இருந்து நேற்று 2வது நாளாக​வும் பல நடவடிக்​கைகளை மேற்​கொண்​டார். அதன் பின்​னர், டெல்​லி​யில் இருந்து தனி விமானம் நேபாள தலைநகர் காத்​மாண்​டு​வுக்கு சென்​றது. அங்கு தயா​ராக இருந்த ஆந்​திர மாநிலத்தை சேர்ந்த 144 பயணி​களை ஏற்றி கொண்டு விசாகப்​பட்​டினம் திரும்​பியது.

விசாகப்​பட்​டினம் விமான நிலை​யத்​தில் நேற்​றிரவு 104 பேரும், திருப்​பதி விமான நிலை​யத்​தில் மீத​முள்ள 40 பேரும் பத்​திர​மாக கொண்டு வந்து சேர்க்​கப்​பட்​டனர். அவர்​களை கண்ட உறவினர்​கள், நண்​பர்​கள் ஆனந்தக் கண்ணீருடன் உற்சாக வரவேற்பு அளித்​தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x