Published : 11 Sep 2025 08:08 AM
Last Updated : 11 Sep 2025 08:08 AM

திருப்பதி தேவஸ்தான நிர்வாக அதிகாரியாக அனில்குமார் பதவியேற்பு

திருமலை: திரு​மலை திருப்​பதி தேவஸ்​தானத்​தின் நிர்​வாக அதி​காரி​யாக அனில்​கு​மார் சிங்​கால் நேற்று 2-வது முறை​யாக ஏழு​மலை​யான் கோயி​லில் பதவி பொறுப்​பேற்​றுக்​கொண்​டார். முன்​ன​தாக அவர் நேற்று அதி​காலை தனது குடும்​பத்​தா​ருடன் கோயிலுக்கு சென்று ஏழு​மலை​யானை வழிபட்​டார். அதன் பின்​னர் அனில் குமார் சிங்​கால் நிர்​வாக அதி​காரி​யாக பதவி பொறுப்​பேற்​றார்.

அவர் திரு​மலை அன்​னமைய்யா பவனில் அனைத்து தேவஸ்​தான உயர் அதி​காரி​களு​டன் ஆலோ​சனை கூட்​டத்​தில் பங்​கேற்​றார். பின்னர் அவர் கூறும்போது, “2-வது முறை​யாக தற்​போது மீண்​டும் இந்த தேவஸ்​தானத்​தின் நிர்​வாக அதி​காரி​யாக பொறுப்பேற்றுள்ளது எனது பூர்வ ஜென்ம பாக்​கி​யம்” என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x