Last Updated : 11 Sep, 2025 08:59 AM

 

Published : 11 Sep 2025 08:59 AM
Last Updated : 11 Sep 2025 08:59 AM

இதுவரை குடியரசு துணைத் தலைவராக பெண் இல்லை: முஸ்லிம்களுக்கு 3 முறை வாய்ப்பு

குடியரசு துணைத் தலைவராக தேர்வாகி உள்ள சி.பி.ராதாகிருஷ்ணன், முன்னாள் குடியரசு துணைத் தலைவர் ஜெகதீப் தன்கர்

புதுடெல்லி: நாடு சுந்​திரம் அடைந்த பிறகு 1952-ல் நாட்​டின் முதல் குடியரசு துணைத் தலை​வர் தேர்​தல் நடை​பெற்​றது. இதில் சோவி​யத் ஒன்​றி​யத்​தின் தூத​ராக இருந்த தமிழ​ரான சர்​வபள்ளி ராதாகிருஷ்ணன் போட்​டி​யின்றி தேர்ந்​தெடுக்​கப்​பட்​டார். 1957-ல் இரண்​டாவது முறை​யாக இப்​ப​தவிக்கு போட்​டி​யின்றி தேர்வு செய்​யப்​பட்ட அவர், 1962-ல் குடியரசுத் தலை​வர் பதவியை​யும் அடைந்​தார்.

1962-ல் நடந்த குடியரசு துணைத் தலை​வர் தேர்​தலில் பிஹார் ஆளுநர் ஜாகிர் உசேன் காங்​கிரஸ் வேட்​பாள​ராக நிறுத்​தப்​பட்​டு வெற்றி பெற்றார். சர்​வபள்ளி ராதாகிருஷ்ணனை போலவே ஜாகிர் உசேனும் தொடர்ந்து 1967-ல் குடியரசுத் தலை​வ​ரா​னார். இது​வரை எவரும் பெறாத வகை​யில் மூன்று வெவ்​வேறு பிரதமர்​களின் ஆட்​சி​யில் குடியரசு துணைத் தலை​வர் பதவி வகிக்​கும் வாய்ப்பு பி.டி.ஜாட்​டிக்கு கிடைத்​தது. இந்​திரா காந்​தி, மொரார்ஜி தேசாய், சவுத்ரி சரண் சிங் ஆகியோர் ஆட்​சி​யில் அவர் இப்​ப​தவி வகித்​தார்.

முஸ்​லிம்​களில் இரண்​டாவது வாய்ப்​பு, நீதிபதி இதா​யத்​துல்​லா​வுக்கு கிடைத்​தது. பன்​முகத் திறமை கொண்ட இவர் ஒரு​வர்​தான் குடியரசுத் தலை​வர், குடியரசு துணைத் தலை​வர், தலைமை நீதிபதி என மூன்று உயர் பதவி​களை வகித்​தவர். அரசி​யல் பின்​னணி இல்​லாமல் அதி​காரி​யாக இருந்த ஹமீது அன்​சா​ரி, குடியரசு துணைத் தலை​வ​ரான மூன்​றாவது முஸ்​லிம். சர்​வபள்ளி ராதாகிருஷ்ணனுக்கு பிறகு இவரும் தொடர்ந்து 2-வது முறை​யாக குடியரசு துணைத் தலை​வர் ஆனார்.

1992-ல் நடை​பெற்ற தேர்​தலில் தலித் சமூகத்​தினரில் முதல்​முறை​யாக குடியரசு துணைத் தலை​வர் வாய்ப்பை கே.ஆர்​.​நா​ராயணன் பெற்​றார். குடியரசு துணைத் தலை​வ​ரான முதல் பாஜக தலை​வர் பைரோன் சிங் ஷெகாவத் ஆவார். இவரை எதிர்த்து போட்​டி​யிட்ட யுபிஏ வேட்​பாளர் ஷிண்டே தோல்வி அடைந்​தார்.

இருப்​பினும் 2007 யுபிஏ ஆட்​சி​யின் குடியரசுத் தலை​வர் தேர்​தலில் பிர​திபா பாட்​டீலிடம் ஷெகாவத் தோல்​வியடைந்​தார். குடியரசுத் தலை​வர் தேர்​தலில் தோல்​வியடைந்த முதல் குடியரசு துணைத் தலை​வர் ஷெகாவத் ஆவார். இவருக்கு பிறகு, பாஜக​வினர் பட்​டியலில் வெங்​கய்ய நாயுடு, ஜெகதீப் தன்​கருக்கு குடியரசு துணைத் தலை​வர் வாய்ப்பு கிடைத்​தது.

மூத்த காங்​கிரஸ் தலை​வர் சங்​கர் தயாள் சர்மா, குடியரசுத் தலை​வர், குடியரசு துணைத் தலை​வர், முதல்​வர், கேபினட் அமைச்​சர் போன்ற உயர் பதவி​களை வகித்த ஒரே அரசி​யல்​வாதி ஆவார். இது​வன்​றி, காங்​கிரஸ் தேசி​யத் தலை​வர் பதவி​யும் இவர் வகித்துள்ளார்.

தற்​போது 15-வது குடியரசு துணைத் தலை​வர் சி.பி.​ரா​தாகிருஷ்ணனுக்கு முன், இப்​ப​தவி வகித்த 7 பேர் குடியரசுத் தலை​வ​ராக​வும் பதவி வகித்​தனர். குடியரசு துணைத்​ தலை​வ​ராக இருந்​த கிருஷ்ண காந்த்​ தனது பதவிக்​ காலத்​தில்​ இறந்​தார்​. இதுவரை குடியரசு துணைத் தலைவராக பெண் பதவி வகிக்கவில்லை

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x