Last Updated : 11 Sep, 2025 08:51 AM

1  

Published : 11 Sep 2025 08:51 AM
Last Updated : 11 Sep 2025 08:51 AM

இரும்பு தாது ஏற்றுமதி வழக்கில் கர்நாடக காங். எம்எல்ஏ சதீஷ் கிருஷ்ணா கைது

சதீஷ் கிருஷ்ணா

பெங்களூரு: கர்​நாடக மாநிலம் கார்​வார்- அங்​கோலா சட்​டபேர​வைத் தொகு​தி​யின் காங்​கிரஸ் எம்​எல்ஏ சதீஷ் கிருஷ்ணா மீது கடந்த 2010-ம் ஆண்டில் 1.25 லட்​சம் டன் இரும்​புத் தாது சட்ட விரோத​மாக ஏற்​றுமதி செய்​ததாக வழக்கு தொடரப்​பட்​டது. இவ்வழக்கை பெங்​களூரு சிறப்பு நீதி​மன்​றம் விசா​ரித்து அபராதம் விதித்​தது.

இதையடுத்து சதீஷ் கிருஷ்ணா மீது அமலாக்​கத்​துறை கடந்த மாதம் வழக்​குப்​ப​திவு செய்​தது. இவ்​வழக்கு தொடர்​பாக அமலாக்​கத்​துறை மேற்​கொண்ட விசா​ரணை​யில், சதீஷ் கிருஷ்ணா வரு​மான ம‌ற்​றும் துறை​முக அதி​காரி​களின் ஒத்​துழைப்​புடன் ரூ.86.78 கோடி மதிப்​பிலான இரும்பு தாதுக்​களை சட்ட விரோத​மாக ஏற்​றுமதி செய்​தது தெரிய​வந்​தது.

மேலும் கடந்த ஆகஸ்ட் 14 மற்​றும் 15 ஆகிய தேதி​களில் சதீஷ் கிருஷ்ணா​வின் வீடு, அலு​வல​கம் மற்​றும் அவரது நிறு​வனங்​களில் நடத்​திய சோதனை​யில் ரூ.1.68 கோடி ரொக்​கம், 6.75 கிலோ தங்க நகைகள் ஆகியவை பறி​முதல் செய்​யப்​பட்​டன. மேலும் அவரது நிறு​வனங்​களின் வங்​கிக் கணக்​கில் இருந்த ரூ.14.13 கோடி முடக்​கப்​பட்​டது.

இதையடுத்து அமலாக்​கத்​துறை அதி​காரி​கள் காங்​கிரஸ் எம்​எல்ஏ சதீஷ் கிருஷ்ணாவை நேற்று முன்தினம் மாலை கார்​வாரில் கைது செய்​தனர். பின்னர் நீதி​மன்​ற அனுமதியுடன் 3 நாட்​கள் காவலில் எடுத்து விசா​ரித்து வரு​கின்​றனர்.

கடந்த ஓராண்​டில் கர்​நாடக முதல்​வர் சித்​த​ராமை​யா, துணை முதல்​வர் டி.கே.சிவகு​மார், உள்​துறை அமைச்​சர் பரமேஷ்வரா ஆகியோர் மீது அமலாக்​கத்​துறை வழக்​குப்​ப​திவு செய்து விசா​ரித்து வரு​கிறது. இந்​நிலை​யில் கோவா​வில் சூதாட்ட விடு​தி​யில் சட்​ட​விரோத​மாக சூதாட்டம் நடத்​தி​ய​தாக சித்​ரதுர்கா காங்​கிரஸ் எம்​எல்ஏ வீரேந்​திர பப்பி கடந்த வாரம் கைது செய்​யப்​பட்​டார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x