Last Updated : 11 Sep, 2025 08:20 AM

 

Published : 11 Sep 2025 08:20 AM
Last Updated : 11 Sep 2025 08:20 AM

புலியைப் பிடிக்காததால் கிராம மக்கள் ஆத்திரம்: கர்நாடகாவில் 7 வனத் துறையினர் கூண்டில் அடைப்பு

பெங்களூரு: கர்​நாட​கா​வில் உள்ள பந்​திப்​பூர் அரு​கே​யுள்ள வனப்​பகு​தி​யில் புலியை பிடிக்​காமல் அலட்​சி​ய​மாக செயல்​பட்​ட​தாக, வனத்​துறை​யினர் 7 பேரை கூண்​டில் அடைத்து கிராம மக்​கள் எதிர்ப்பை வெளிப்​படுத்​தினர்.

கர்​நாடக மாநிலம் சாம்​ராஜ்நகர் மாவட்​டத்​தில் பந்​திப்​பூர் தேசிய வனவிலங்கு காப்​பகம் அமைந்​துள்​ளது. இந்த காப்​பகத்தை சுற்​றி​யுள்ள கிராமங்​களில் கடந்த 6 மாதங்​களில் 20க்​கும் மேற்​பட்ட ஆடு, மாடு​களை புலி, சிறுத்​தைகள் பிடித்து தின்​ற​தால் கோபம் அடைந்​தனர். அதேவேளை​யில் புலிகளை பிடிக்​காமல் வனத் துறை​யினர் அலட்​சி​ய​மாக செயல்​பட்​ட​தாக கூறப்​படு​கிறது.

இந்​நிலை​யில் நேற்று முன்​தினம் 2 மாடு​களை புலி தின்​ற​தால் கிராம மக்​கள் நஷ்ட ஈடு கோரி ஆர்ப்​பாட்​டம் நடத்​தினர். மேலும் புலிகளை பிடிக்க உடனடி​யாக நடவடிக்கை எடுக்​கு​மாறு கோரினர். இதனிடையே குண்​டுலுபேட்​டையை அடுத்​துள்ள பொம்மலபுரா​வில் புலியை பிடிக்க வனத்​துறை ஊழியர்​கள் 7 பேர் தாமத​மாக வந்​தனர். அதற்​குள் புலி காட்​டுக்​குள் ஓடி​விட்​ட​தாக கூறப்​படு​கிறது.

அப்​போது விவ​சாய சங்​கத் தலை​வர் ஹொன்​னூரு பிர​காஷ் தலை​மையி​லான கிராம மக்​கள், வனத்​துறை ஊழியர்​களிடம், ‘‘தாமத​மாக வந்​தது ஏன்​?’’ என கேள்வி எழுப்​பினர். இதனால் இரு தரப்​பினரிடையே வாக்​கு​வாதம் ஏற்​பட்ட நிலை​யில், கிராம மக்​கள் புலியை பிடிக்​காத‌ வனத் துறை​யினர் 7 பேரை​யும் பிடித்து கூண்​டில் அடைத்​து, முழக்​கங்​களை எழுப்​பினர்.

இதையடுத்து குண்​டுலுபேட்டை வட்​டாட்​சி​யர் மற்​றும் வனத்​துறை அதி​காரி​கள் கிராம மக்​களிடம் பேசி, சமா​தானம் செய்​தனர். மேலும், புலியை விரைந்து சிறை பிடிக்க நடவடிக்கை எடுக்​கப்​படும் என கிராம மக்​களிடம் அதி​காரி​கள் உறுதி அளித்​தனர். சுமார் 2 மணி நேரத்​துக்கு பின்​னர் கிராம மக்​கள் வனத்​துறை ஊழியர்​கள் 7 பேரை​யும் கூண்டை திறந்து விடு​வித்​த‌னர். இந்த சம்​பவத்​தால் அங்​கு சிறிது நேரம்​ பரபரப்​பு ஏற்​பட்​டது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x