Published : 11 Sep 2025 08:16 AM
Last Updated : 11 Sep 2025 08:16 AM

சீன எல்லை வழியாக கடந்த 2 ஆண்டுகளில் ரூ.800 கோடி மதிப்புள்ள தங்கம் இந்தியாவுக்கு கடத்தல்

புதுடெல்லி: கடந்த 2023 மற்​றும் 2024 ஆகிய 2 ஆண்​டு​களில் மட்​டும் 1,000 கிலோ தங்​கம் சீன எல்லை வழி​யாக சட்​ட​விரோத​மாக இந்​தி​யா​வுக்​குள் கடத்தி வரப்​பட்​டது அமலாக்​கத் துறை விசா​ரணை​யில் தெரிய வந்​துள்​ளது. இதன் மதிப்பு ரூ.800 கோடி​யாகும். சீன எல்லை வழி​யாக இந்​தி​யா​வுக்​குள் தங்கம் கடத்தி வரும் சட்​ட​விரோத நடவடிக்​கை​களில் சீனர்​கள், திபெத்​தி​யர்​களுக்கு தொடர்பு இருப்​பதும் கண்​டு​பிடிக்​கப்​பட்​டுள்​ளது.

இதுகுறித்து அமலாக்​கத் துறை நேற்று வெளி​யிட்ட அறிக்​கை​யில் கூறி​யிருப்​ப​தாவது: இந்​திய - சீனா இடையே 3,488 கி.மீ. உண்​மை​யான எல்​லைக் கட்​டுப்​பாட்டு கோட்​டரு​கில் இந்தோ - திபெத் எல்​லைப் போலீ​ஸார் ரோந்துப் பணி​யில் ஈடு​பட்டு வரு​கின்​றனர். அதன்​படி கடந்த ஆண்டு ஜூலை மாதம் லடாக் பகு​தி​யில் இந்தோ - திபெத் எல்​லைப் போலீ​ஸார் தீவிர ரோந்துப் பணி​யில் ஈடு​பட்​டிருந்​தனர்.

அப்​போது 108 கிலோ வெளி​நாட்டு தங்​கம் எல்லை வழி​யாக கடத்தி வரப்​பட்​டது கண்​டு​பிடிக்​கப்​பட்​டது. அந்த தங்​கம் பறி​முதல் செய்​யப்​பட்​டது. இதில் உள்​ளூரை சேர்ந்த 3 பேர் கைது செய்​யப்​பட்​டனர். இதுதொடர்​பாக கடந்த செவ்​வாய்க்​கிழமை டெல்​லி​யின் என்​சிஆர் பகு​தி​யில் 5 இடங்​களில் திடீர் சோதனை நடத்​தப்​பட்​டது. லடாக்​கில் ஒரு இடத்​தில் சோதனை நடந்​தது.

இந்த விவ​காரத்​தில் வரு​வாய் புல​னாய்​வு இயக்​குநரக​மும் தீவிர விசா​ரணை நடத்தி வரு​கிறது. இதன் விசா​ரணை​யில், சீன எல்லை வழி​யாக இது​போல் 1,064 கிலோ தங்​கம் கடத்​தப்​பட்​டிருப்​பதும், அதற்​கான பணம் கிரிப்​டோகரன்சி மூலம் செலுத்​தப்​பட்​டிருப்​பதும் கண்​டு​பிடிக்​கப்​பட்​டுள்​ளது. இதுதொடர்​பாக 10 பேரை வரு​வாய் புல​னாய்​வுத் துறை​யினர் கைது செய்து விசா​ரணை நடத்தி வரு​கின்​றனர்.

சீனாவை சேர்ந்த பு சும் சும் என்​பவர் பெயரில் இருந்து இந்​தி​யா​வில் உள்ள டெண்டு தஷி என்​பவர் பெயருக்கு எல்லை வழி​யாக வெளி​நாட்டு தங்​கம் அனுப்பி வைக்​கப்​பட்​டுள்​ளது. இந்த தங்க கடத்​தலில் டெண்டு தஷி மூளை​யாக செயல்​பட்​டுள்​ளார். அதே​போல் சீனா​வில் இருந்து திபெத்தை சேர்ந்த டென்​சின் கந்​தாப் என்​பவர் சட்​ட​விரோத கடத்​தல் தங்​கத்தை பெற்​றுள்​ளார். அதை இந்​தி​யா​வில் உள்ள கடத்​தல்​காரர்​களிடம் ஒப்​படைக்​கும் பொறுப்பை அவர் ஏற்​றுள்​ளார்.

டெண்டு தஷி கடத்திக் கொண்டு வந்த தங்​கத்தை டெல்​லி​யில் உள்ள தனி நபர்​கள் பலர் பெற்​று, அவற்றை தங்க நகைக் கடைகள், டீலர்​களுக்கு விற்​றுள்​ளனர். இதுதொடர்பாக தொடர்ந்து வி​சா​ரணை நடை​பெறுகிறது. இவ்​வாறு அமலாக்​கத்​ துறை அறிக்​கை​யில்​ கூறப்​பட்​டுள்​ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x