Published : 11 Sep 2025 07:15 AM
Last Updated : 11 Sep 2025 07:15 AM

நேபாள வன்முறையால் மானசரோவர் யாத்திரை சென்ற பக்தர்கள் திபெத்தில் தவிப்பு

புதுடெல்லி: சீனா​வின் கட்​டுப்​பாட்​டில் உள்ள திபெத்​தில் கைலாஷ் மானசரோவர் அமைந்​துள்​ளது. இதனால் அங்கு செல்​வதற்கு சீன அரசின் முன் அனு​மதி பெற வேண்​டியது அவசி​யம். இந்​நிலை​யில், கடந்த 2020-ம் ஆண்டு லடாக் எல்​லை​யில் இந்​தி​யா, சீனா இடையே மோதல் ஏற்​பட்​ட​தால் கைலாஷ் மானசரோவர் யாத்​திரை நிறுத்​தப்​பட்​டது. 5 ஆண்​டுக்​குப் பிறகு மீண்​டும் இந்த யாத்​திரை தொடங்கியது.

மானசரோவருக்கு லிபுலேக் கணவாய் (உத்​த​ராகண்ட்), நாது லா கணவாய் (சிக்​கிம்), காத்​மாண்டு (நே​பாளம்) ஆகிய 3 வழிகளில் செல்ல முடி​யும். இந்​நிலை​யில், சுமார் 750 பக்​தர்​கள் அரசு முகமை​கள் மூலம் கைலாஷ் யாத்​திரை புறப்​பட்​டனர். இதில் பெரும்​பாலானவர்​கள் காத்​மாண்டு வழி​யாக சென்​றனர்.

இந்த சூழலில் நேபாளத்​தில் அரசுக்கு எதி​ரான போராட்​டம் வலு​வடைந்து வன்​முறை​யாக மாறி போர்க்​கள​மாக மாறி உள்​ளது. போக்​கு​வரத்து முற்​றி​லும் முடங்கி உள்​ளது. இதனால், மானசரோவர் சென்ற பக்​தர்​கள் நாடு திரும்ப முடி​யாமல் திபெத்​தில் தவிக்​கின்​றனர். இவர்​கள் தாங்​கள் தாயகம் திரும்ப உதவ வேண்​டும் என மத்​திய வெளி​யுறவு அமைச்​சகத்​துக்​கு கோரிக்​கை வைத்​துள்​ளனர்​.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x