Published : 09 Sep 2025 08:18 AM
Last Updated : 09 Sep 2025 08:18 AM

குல்காம் என்கவுன்ட்டர்: 2 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை

ஸ்ரீநகர்: தெற்கு காஷ்மீரின் குல்​காம் மாவட்​டத்​தில் உள்ள குட்​டார் வனப் பகு​தி​யில் தீவிர​வா​தி​கள் நடமாட்​டம் இருப்​ப​தாக கிடைத்த தகவலின் பேரில் பாது​காப்பு படை​யினர் அங்கு விரைந்​தனர்.

இதில் பாது​காப்பு படை​யினர் - தீவிர​வா​தி​கள் இடையே மோதல் ஏற்​பட்​டது. லஷ்கர்​-இ-தொய்பா அமைப்பை சேர்ந்த 2 தீவிர​வா​தி​கள் கொல்​லப்​பட்​டனர்.

அதேவேளை​யில் பாது​காப்பு படை தரப்​பில் 3 வீரர்​கள் காயம் அடைந்​தனர். இவர்​களில் இரு​வர் பின்​னர் மருத்​து​வ​மனை​யில் சிகிச்சை பலனின்றி உயி​ரிழந்​தனர். இறந்த தீவிர​வா​தி​களில் ஒரு​வர் உள்​ளூரை சேர்ந்​தவர், மற்​றொரு​வர் வெளி​நாட்​ட​வர்
என்​று தெரிய​வந்​துள்​ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x