Published : 09 Sep 2025 08:13 AM
Last Updated : 09 Sep 2025 08:13 AM

திருப்பதி தேவஸ்தான நிர்வாக அதிகாரியாக அனில் குமார் மீண்டும் நியமனம்

விஜயவாடா: ஆந்​திர அரசு 11 ஐஏஎஸ் உயர் அதி​காரி​களை நேற்று இடமாற்​றம் செய்தது. திரு​மலை திருப்​பதி தேவஸ்​தான நிர்​வாக அதி​காரி​யாக மீண்​டும் அனில் குமார் சிங்​கால் நியமிக்​கப்​பட்​டுள்​ளார். தற்​போதைய தேவஸ்​தான நிர்​வாக அதி​காரி​ சியாமள ராவ், தலை​மைச் செயலக அட்​மின் முக்​கிய செய​லா​ள​ராக இடமாற்​றம் செய்​யப்​பட்​டுள்​ளார்.

சாலை, கட்​டிடத்​துறை சிறப்பு பிர​தான செய​லா​ள​ராக கிருஷ்ண​பாபு, வரு​வாய், கலால் துறை முதன்​மைச் செய​லா​ள​ராக முகேஷ் குமார் மீனா, சிறு​பான்மை நலவாரிய முக்​கிய செய​லா​ள​ராக சி.எச். தர், வனத்​துறை மற்​றும் சுற்​றுலாத் துறை செய​லா​ள​ராகா காந்​திலால் தண்டே நியமிக்​கப்​பட்​டுள்​ளனர்.

மேலும் ஆளுநரின் சிறப்பு செய​லா​ள​ராக அனந்​த​ராம், குடும்ப நலத்​துறை சிறப்பு செய​லா​ள​ராக சவுபர் கவுர், ஆந்​திர பிரதேஷ் பவன் ரெசிடெண்ட் கமிஷன​ராக பிர​வீன் குமார், தொழிலா​ளர் நல வாரிய ஆணை​ய​ராக சேஷகிரி பாபு, வரு​வாய் (இந்து சமய அறநிலைய துறை) செய​லா​ள​ராக ஹரி ஜவஹர் நியமிக்​கப்​பட்​டுள்​ளனர்​.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x