Published : 09 Sep 2025 07:58 AM
Last Updated : 09 Sep 2025 07:58 AM

கடல் முதல் மலை வரையிலான எல்லைகளை ட்ரோன்கள் மூலம் கண்காணிக்க திட்டம்

புதுடெல்லி: கடல் முதல் மலைகள் வரை இந்​தி​யா​வின் எல்​லைப் பகு​தி​களை ட்ரோன்​கள் மூலம் கண்​காணிக்க ராணுவம் திட்​ட​மிட்டுள்​ளது. பாகிஸ்​தான், சீனா, வங்​கதேசம், மியான்​மர், பூடான் நாடு​களு​டன் இந்​தியா எல்​லையை பகிர்ந்து கொண்டு உள்​ளது. மேலும் இலங்​கை, மாலத்​தீவு ஆகிய தீவு நாடு​கள் இந்​தி​யா​வுக்கு அருகே அமைந்​துள்​ளன. மிக நீண்ட கால​மாக சீன, பாகிஸ்​தான் எல்​லைப் பகு​தி​களில் பிரச்​சினை நீடித்து வரு​கிறது.

எல்​லைப் பிரச்​சினை தொடர்​பாக கடந்த 1962-ம் ஆண்​டில் இந்​தி​யா, சீனா இடையே மிகப்​பெரிய போர் நடை​பெற்​றது. கடந்த 2017-ம் ஆண்​டில் சிக்​கிமின் டோக்​லாம் பகு​தி​யில் இரு நாடு​கள் இடையே 73 நாட்​கள் போர் பதற்​றம் நீடித்​தது. கடந்த 2020-ம் ஆண்டு மே மாதம் லடாக்​கின் கல்​வான் பள்​ளத்​தாக்கு பகு​தி​யில் இந்​திய, சீன வீரர்​களிடையே மிகப்​பெரிய மோதல் ஏற்​பட்​டது.

எல்​லைப் பிரச்​சினை தொடர்​பாக கடந்த 1947, 1965, 1971, 1999-ம் ஆண்​டு​களில் இந்​தி​யா​வுக்​கும் பாகிஸ்​தானுக்​கும் இடையே போர்கள் நடை​பெற்​றன. பஹல்​காம் தீவிர​வாத தாக்​குதல் தொடர்​பாக கடந்த மே மாதம் 2 நாடு​களுக்​கும் இடையே 4 நாட்​கள் அதிதீ​விர போர் நடை​பெற்​றது.

இந்நிலையில், இந்​திய ராணுவ வட்​டாரங்​கள் கூறிய​தாவது: எல்​லைப் பகு​தி​களில் கண்​காணிப்பு மற்​றும் ஆயுதங்​களை கொண்டு செல்ல ட்ரோன்​கள் பயன்​படுத்​தப்​படு​கின்​றன. தகவல் தொடர்பு மற்​றும் தீவிர​வா​தி​களை வேட்​டை​யாட​வும் ட்ரோன்​கள் பயன்​படுத்​தப்​பட்டு வரு​கின்​றன. இந்த சூழலில் எல்​லைப் பகு​தி​களை கண்​காணிக்க 5,000 சிறப்பு ட்ரோன்​களை பயன்​படுத்த திட்​ட​மிடப்​பட்டு உள்​ளது. இவை தரைதளத்​துடன் கேபிள் மூலம் இணைக்​கப்​பட்டு இருக்​கும்.

இதன்​படி சுமார் 100 மீட்​டர் உயரத்​தில் ட்ரோன்​கள் பறக்​கும். இவை சுமார் 10 கி.மீ. தொலைவு வரை கண்​காணிப்பு பணி​களை மேற்​கொள்​ளும். ஒரு ட்ரோன் தொடர்ந்து 9 மணி நேரம் பறக்​கும் திறன் கொண்​ட​தாக இருக்​கும். இந்த ட்ரோன்​களில் ஜிபிஎஸ் கருவி பொருத்​தப்​படும். சிறப்பு தகவல் தொடர்பு கருவி​கள் மூலம் செயற்​கைக்​கோள்​கள் உடன் ட்ரோன்​கள் இணைக்​கப்​பட்டு இருக்​கும்.

காஷ்மீர், லடாக், வடகிழக்கு மாநிலங்​களின் மலைப்​பகு​தி​களில் சிறப்பு ட்ரோன்​கள் கண்​காணிப்பு பணி​யில் ஈடு​படுத்​தப்​படும். இவை தரைதளத்​தில் கேபிளு​டன் இணைக்​கப்​பட்ட ட்ரோன்​கள் பறக்​கும். இதே​போல கடல் எல்​லைப் பகு​தி​களில் அச்​சுறுத்​தல் நில​வும் பகு​தி​களி​லும் ட்ரோன்​கள் பணி​யில் ஈடு​படுத்​தப்​படும். அனைத்து தட்​பவெப்ப சூழ்​நிலைகளி​லும் சிறப்பு ட்ரோன்​கள் கண்​காணிப்பு பணி​களை மேற்​கொள்​ளும்.

இந்த ட்ரோன்​கள் இந்​தி​யா​வின் ஆகாஷ்தீர் வான் பாது​காப்பு கவச கட்​டமைப்​புடன் இணைக்​கப்​படும். இதன்மூலம் எதிரி​களின் வான்வழி அச்​சுறுத்​தல்​களை இந்​தியா மிக எளி​தாக எதிர்​கொள்​ள முடி​யும்​. இவ்​வாறு இந்​தி​ய ராணுவ வட்​டாரங்​கள்​ தெரிவித்​தன.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x