Published : 09 Sep 2025 07:50 AM
Last Updated : 09 Sep 2025 07:50 AM

ம.பி.யில் தண்டனை காலத்துக்கு அதிகமாக சிறையில் அடைக்கப்பட்டிருந்தவருக்கு ரூ.25 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவு

போபால்: மத்​திய பிரதேசத்​தில் தண்​டனை காலத்​துக்கு அதி​க​மாக சிறை​யில் அடைக்​கப்​பட்​டிருந்​தவருக்கு ரூ.25 லட்​சம் இழப்​பீடு வழங்க வேண்​டும் என மாநில அரசுக்கு உச்ச நீதி​மன்​றம் உத்​தர​விட்​டுள்​ளது. மத்​திய பிரதேச மாநிலத்​தைச் சேர்ந்த சோஹன் சிங் மீது பாலியல் வன்​கொடுமை புகார் எழுந்​தது. இந்த வழக்கை விசா​ரித்த கீழமை நீதி​மன்​றம் கடந்த 2005-ம் ஆண்டு அவருக்கு ஆயுள் தண்​டனை​யும் ரூ.2 ஆயிரம் அபராத​மும் விதித்​தது.

இந்த தீர்ப்பை எதிர்த்து மத்​திய பிரதேச உயர் நீதி​மன்​றத்​தில் அவர் மேல் முறை​யீடு செய்​தார். இதை விசா​ரித்த உயர் நீதி​மன்​றம், சில குற்​றச்​சாட்​டு​களுக்கு போது​மான ஆதா​ரம் இல்லை எனக் கூறி ஆயுள் தண்​டனையை 7 ஆண்​டு​களாக குறைத்து கடந்த 2017-ல் உத்​தர​விட்​டது. ஆனால் 8 ஆண்​டு​கள் கழித்து கடந்த ஜூன் மாதம்​தான் சோஹன் சிங் விடு​தலை செய்​யப்​பட்​டார்.

இந்​நிலை​யில், தண்​டனை காலத்​துக்​கும் கூடு​தலாக சிறை​யில் அடைத்து வைத்​திருந்​த​தாகக் கூறி சோஹன் சிங் உச்ச நீதி​மன்​றத்​தில் மனு தாக்​கல் செய்​தார். இந்த மனுவை நீதிப​தி​கள் ஜே.பி.பர்​தி​வாலா மற்​றும் கே.​வி.​விஸ்​வ​நாதன் அமர்வு விசா​ரித்​தது. இந்த மனு நேற்று விசா​ரணைக்கு வந்​தது. அப்​போது, தண்​டனைக் காலம் முடிந்த பிறகும் சோஹன் சிங்கை விடு​தலை செய்​யாதது அடிப்​படை உரிமையை மீறும் செயல் என கண்​டனம் தெரி​வித்​தனர்.

அப்​போது அரசுத் தரப்​பில் ஆஜரான வழக்​கறிஞர், சோஹன் சிங் அவ்​வப்​போது ஜாமீனில் வெளி​யில் வந்த காலத்தை கழித்​தால் 4.7 ஆண்​டு​கள் மட்​டுமே கூடு​தல் தண்​டனை அனுப​வித்​துள்​ளார் என தெரி​வித்​தார். இதையடுத்​து, சோஹன் சிங்​குக்கு ரூ.25 லட்​சம் இழப்​பீடு வழங்க வேண்​டும் என நீதிப​தி​கள் உத்​தர​விட்​டனர். மேலும், மாநிலத்​தில் இது​போல தண்​டனைக் காலம் முடிந்​தும் யாராவது விடு​தலை செய்​யப்​ப​டா​மல் இருக்​கிறார்​களா என வி​சா​ரணை நடத்​து​மாறு மத்​திய பிரதேச சட்ட சேவை​கள் ஆணை​யத்​துக்​கு நீதிப​தி​கள்​ உத்​தர​விட்​டனர்​.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x