Published : 08 Sep 2025 09:01 AM
Last Updated : 08 Sep 2025 09:01 AM

பாஜக எம்பி.க்களின் 2 நாள் பயிற்சிபட்டறை: கடைசி வரிசையில் அமர்ந்திருந்த பிரதமர் மோடி

டெல்லியில் நேற்று நடைபெற்ற பாஜக எம்பிக்களுக்கான பயிற்சி பட்டறையில் கடைசி வரிசையில் அமர்ந்து நிகழ்ச்சிகளை உன்னிப்பாக கவனிக்கும் பிரதமர் நரேந்திர மோடி. | படம்: பிடிஐ |

புதுடெல்லி: ​பாஜக எம்​பி.க்​களின் இரண்டு நாள் பயிற்சி பட்​டறை நேற்று தொடங்​கியது. இந்த கூட்​டத்​தில் பிரதமர் மோடி கடைசி வரிசை​யில் அமர்ந்​திருந்து நிகழ்ச்​சிகளை கவனித்​தார். இதுதொடர்​பான புகைப்​படம் தற்​போது சமூக வலை​தளங்​களில் வெளி​யாகி வைரலாகி உள்​ளது. இந்த கூட்​டத்​தில் குடியரசு துணைத் தலை​வர் தேர்​தலில் எவ்​வாறு வாக்​களிப்​பது என்​ப​தற்​கான பயிற்​சிகளும் வழங்​கப்பட உள்​ளது.

நாடாளு​மன்ற உறுப்​பினர்​கள் அனை​வரும் பங்​கேற்​கும் பாஜக​வின் இரண்டு நாள் பயிற்சி பட்​டறை நேற்று தொடங்​கியது. இதில், ஜிஎஸ்​டி​யில் மிகப்​பெரிய சீர்​திருத்​தத்தை கொண்டு வந்த பிரதமர் மோடிக்கு பாஜக எம்​பிக்​கள் அனை​வரும் பாராட்டு தெரி​வித்​தனர். முதல் நாளான நேற்று இரண்டு முக்​கிய கருப்​பொருள்​களில் கவனம் செலுத்​து​வது என முடிவு செய்​யப்​பட்​டது.

அதன்​படி, 2027-க்​குள் முன்​னேறிய இந்​தி​யாவை உரு​வாக்​கு​வதற்​கான பாதைகளை வகுப்​பது மற்​றும் சமூக வலை​தளங்​களை பாஜக எம்​பிக்​கள் திறம்பட கையாளுவது எப்​படி என்​பது குறித்து விரி​வான ஆலோசனை நடத்​தப்​பட்​டது.

மேலும், மதி​யத்​துக்​குப் பிற​கான கூட்​டத்​தில், வேளாண், பாது​காப்​பு, எரிசக்​தி, கல்​வி, ரயில்​வே, போக்​கு​வரத்து ஆகிய துறை​களின் செயல்​பாடு​கள் குறித்து பாஜக எம்​பிக்​கள் குழுக்​களாக கூடி விவாதம் நடத்​தினர். 2-வது பயிற்சி நாளான இன்​று, செப்​. 9-ம் தேதி நடை​பெற உள்ள குடியரசு துணைத் தலை​வர் தேர்​தலில் எவ்​வாறு செயல்பட வேண்​டும் என்​பது குறித்து பாஜக எம்​பிக்​களுக்கு பயிற்சி அளிக்​கப்பட உள்​ளது.

குடியரசு துணைத் தலை​வர்: செப்​டம்​பர் 9-ல் குடியரசு துணைத் தலை​வர் தேர்​தல் நடை​பெற உள்​ளது. இதில், இண்​டியா கூட்​டணி சார்​பில் முன்​னாள் உச்ச நீதி​மன்ற நீதிபதி பி.சுதர்​சன்ரெட்டி (80) போட்​டி​யிடு​கிறார். தேசிய ஜனநாயக கூட்​ட​ணி​யின் (என்​டிஏ) வேட்​பாள​ராக சி.பி. ராதாகிருஷ்ணன் (67) உள்​ளார். இவர்​கள் இரு​வரும் தென்​னிந்​தி​யாவை சேர்ந்​தவர்​கள் என்​பது சிறப்​பு. அதி​லும், ராதாகிருஷ்ணன் தமிழகத்​தை​யும், சுதர்​சன் ரெட்டி ஆந்​தி​ராவை​யும் சேர்ந்​தவர்​கள்.

ராதா கிருஷ்ணன் தற்​போது மகா​ராஷ்டிரா ஆளுந​ராக உள்​ளார். இவர் வாஜ்​பாய் காலத்​தில் கோவையி​லிருந்து இரண்டு முறை மக்​களவைக்கு தேர்​வானவர். உச்ச நீதி​மன்ற நீதிப​தி​யாக இருந்து 2011 ஜூலை​யில் ஓய்வு பெற்​றவர் சுதர்​சன் ரெட்​டி. இவர் நீதிபதியாக பணி​யாற்​றியபோது, கருப்பு பணம் உள்​ளிட்ட பல்​வேறு வழக்​கு​களில் மத்​திய அரசை விமர்​சித்து பல வரலாற்று சிறப்​புமிக்​க தீர்ப்​பு​களை வழங்​கி​யுள்​ளார்​.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x