Published : 08 Sep 2025 08:56 AM
Last Updated : 08 Sep 2025 08:56 AM

ஜார்க்கண்டில் வறுமை காரணமாக ரூ.50,000-க்கு விற்கப்பட்ட ஒரு மாத குழந்தை மீட்பு 

ராஞ்சி: உத்தர பிரதேசத்​தின் மிர்​சாபூரைச் சேர்ந்த ராமச்​சந்​திர ராம், ஜார்க்​கண்ட் மாநிலம் பலமு மாவட்​டம் லொட்வா கிராமத்துக்கு சென்று கூலி வேலை செய்து வருகிறார். இவரது மனைவி பிங்கி தேவி.சமீபத்​தில் பெய்த கனமழை​யால் இவர்​கள் தங்​கி​யிருந்த குடிசை சேதமடைந்​துள்​ளது. இந்த தம்​ப​திக்கு 4 குழந்​தைகள். ஒரு மாதம் முன்பு 5-வ​தாக ஆண் குழந்தை பிறந்துள்ளது.

அதிலிருந்து தேவிக்கு உடல்​நிலை சரி​யில்​லாமல் போய் உள்​ளது. சிகிச்​சைக்கு பணம் இல்​லாத காரணத்​தால், தங்​களு​டைய ஒருமாத ஆண் குழந்​தையை ரூ.50 ஆயிரத்​துக்கு விற்​பனை செய்​துள்​ளனர். இதுகுறித்து ஊடகங்​களில் வெளி​யான தகவலை அறிந்த முதல்​வர் ஹேமந்த் சோரன், விசா​ரணை நடத்த உத்​தர​விட்​டார்.

இதையடுத்​து, லெஸ்​லிகஞ்ச் காவல் நிலைய குழு​வினர் விசா​ரணை​யில் இறங்​கினர். பின்​னர் லடேஹர் மாவட்​டத்​தில் குழந்​தையை மீட்டு வந்து பெற்​றோரிடம் ஒப்​படைத்​தனர். அப்​போது, ராம் தம்​ப​தி​யிடம் நடத்​திய விசா​ரணை​யில், ஆதார் மற்​றும் குடும்ப அட்டை இல்​லாத​தால் அரசின் நலத்​திட்​டங்​களை அவர்​களால் பெற முடிய​வில்லை என தெரிய​வந்​தது. இதையடுத்​து, உடனடி​யாக அந்த தம்​ப​திக்கு ஆதார் மற்​றும் குடும்ப அட்டை கிடைக்க நடவடிக்​கை எடுத்​துள்​ளனர்​.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x