Published : 08 Sep 2025 06:56 AM
Last Updated : 08 Sep 2025 06:56 AM

50-க்கும் மேற்பட்ட அரசு உயர் அதிகாரிகளை உருவாக்கிய இந்தியாவின் ‘ஐஏஎஸ் தொழிற்சாலை’ கிராமம்

லக்னோ: உத்தர பிரதேசத்​தின் கிழக்கு பகு​தி​யில் உள்ள ஜவுன்​பூர் மாவட்​டத்​தில் உள்ள சிறு கிராமம் மாதோபட்​டி, தேசிய அளவில் இடம் பிடித்​துள்​ளது. கடந்த நூற்​றாண்​டில், இது ஐஏஎஸ், ஐபிஎஸ், ஐஆர்​எஸ் மற்​றும் ஐஎப்​எஸ் என 50-க்​கும் மேற்​பட்ட அரசு உயர் அதி​காரி​களை உரு​வாக்​கி​யுள்​ளது. இதனால் இந்​தி​யா​வின் ஐஏஎஸ் தொழிற்​சாலை என்ற புனைப் பெயரை மாதோபட்​டி பெற்​றுத் தந்​துள்​ளது.

பிரிட்​டிஷ் ஆட்​சி​யின்​போது, கடந்த 1914-ம் ஆண்டு குடிமைப் பணி தேர்​வில் வெற்றி பெற்ற முகமது முஸ்​தபா ஹுசைன், மாதோபட்டி கிராமத்​தின் முதல் ஐஏஎஸ் அதி​காரி என்ற சாதனையை படைத்​தார். இது அந்த கிராமத்​தைச் சேர்ந்த இளைஞர்​களுக்கு ஊக்​க​மாக அமைந்​தது. அடுத்​தடுத்து பலர் குடிமைப் பணித் தேர்​வில் வெற்றி பெற்று வரு​கின்​றனர்.

1950-களில் மாதோபட்​டியைச் சேர்ந்த இந்து பிர​காஷ் சிங் முதல் ஐஎப்​எஸ் அதி​காரி​யா​னார். இது​போல ஒரே குடும்​பத்​தைச் சேர்ந்த வினய் குமார் சிங், சத்​ர​பால் சிங், அஜய் குமார் சிங் சஷி​காந்த் சிங் ஆகிய 4 சகோ​தரர்​கள் குடிமைப் பணி அதி​காரி​களாக தேர்​வாகி அந்த கிராமத்​துக்கு மகுடம் சூட்​டினர்.

குடிமைப்பணிக்கான பயிற்சி மையம் எது​வுமே இல்​லா​விட்​டாலும் மாதோபட்டி கிராம இளை ஞர்​கள் சத்​தமின்றி சாதனை படைத்து வரு​கின்​றனர். குடிமைப் பணி தேர்​வில் ஏற்​கெனவே வெற்றி பெற்று பதவி​யில் இருப்​பவர்​கள் இளைஞர்​களுக்கு புத்​தகங்​கள், குறிப்​பு​கள் மற்​றும் உத்​தி​கள் மூலம் வழி​காட்​டு​தல் வழங்கி வரு​கின்​றனர். பள்​ளிப் பரு​வத்​திலிருந்தே குடிமைப் பணி தேர்​வுக்கு தயா​ராகத் தொடங்கி விடு​கின்​றனர்.

இஸ்​ரோ, பாபா அணு ஆராய்ச்சி மையம் உள்​ளிட்ட பிரபல நிறு​வனங்​களி​லும் இந்த கிராமத்​தினர் ஆதிக்​கம்​ செலுத்​தி வரு​கின்​றனர்​. அங்​கு லட்​சி​யம்​ நிறு​வனங்​களால்​ அல்​லாமல்​,சமூகத்​​தால்​ வளர்​க்​கப்​படுகிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x